கோவையில் உட்கார்ந்த இடத்திலேயே 2.5 கோடி சம்பாத்தித்த தீபக்.. 90 கோடி ஆசைப்பட்டவர் ஏமாற்றம்
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபருடன் நன்கு பழகிய தீபக் என்பவர், ரூ.300 கோடி வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அந்த பணம் ரிசர்வ் வங்கியில் உள்ளதாகவும் தெரிவித்தாராம். மேலும் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவி செய்தால் ரூ.300 கோடியில் 30 சதவீத தொகையை கமிஷனாக கொடுப்பதாக கூறினாராம். இதை நம்பி 2.5 கோடி ரியல் எஸ்டேட் அதிபர் கொடுத்தாராம். ஆனால் அவர் நினைத்தபடி 30 சதவீத கமிஷனான 90 கோடி கிடைக்கவில்லை. மாறாக மொத்தமாக 2.5 கோடியும் ஏமாந்து விட்டாராம். இந்த விவகாரத்தில் தீபக் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு மக்களை ஏமாற்றி பயணம் பறிக்க பலர் நூதன முறைகளை கையாளுகிறார்கள். நம்ப முடியாத ஆஃபர்களை தருகிறார்கள். 1 கோடி கொடுத்தால் 10 கோடி, ஒரு லட்சம் கட்டினால் மாதம் 12000 வட்டி என்று அறிவிக்கிறார்கள். இதனை உண்மை என்று நம்பி பணத்தை முதலீடு செய்து அல்லது கொடுத்து மக்கள் ஏமாறுகிறார்கள். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த ஏமாற்றம் ஒன்று கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் கோவூர் பகுதியைச் சேர்ந்த 56 வயதாகும் ரவி, ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அண்மையில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறுகையில், கோவை மாவட்டம் பட்டணம் பகுதியைச் சேர்ந்த முத்து, அவரது மகன் தீபக் (27) ஆகியோருடன் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தோம். முத்து கடந்த 2022-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதற்கிடையே தீபக் என்னை அணுகி தனது அப்பாவிற்கு ரூ.300 கோடி வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அந்த பணம் ரிசர்வ் வங்கியில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவி செய்தால் ரூ.300 கோடியில் 30 சதவீத தொகையை கமிஷனாக கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு ஆதாரமாக போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை காண்பித்தார். இதனை நம்பிய நான் அவருக்கு பல்வேறு கட்டங்களாக ரூ.2.5 கோடி கொடுத்தேன். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர் கூறியபடி கமிஷன் தொகையை தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது பணத்தை மட்டுமாவது தரும்படி கேட்டேன்.
ஆனால் தீபக், அவரது தாயார் ஷாலினி, சகோதரி ரேஷ்மா, உறவினர் ராஜா ஆகியோர் எனது பணத்தை தராமல் ஏமாற்றியதுடன், என்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுத்து ரூ.2.5 கோடியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக், ஷாலினி, ரேஷ்மா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்.. மத்திய அரசு செய்வது சதி.. ப சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications