எனது கணவர் திருவண்ணாமலை என்பதால் எவ வேலு அங்கிளை தெரியும்.. “ரெய்டு ஓவர்”.. மீனா ஜெயக்குமார் பேட்டி!
கோவை: அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், தனது கணவர் திருவண்ணாமலைக்காரர் என்பதால் அங்கிளுடன் பழக்கம் என்றும் மீனா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள மீனா ஜெயக்குமாரின் வீடு, அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் வீடு மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி ஆகியோரின் வீடுகளிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மீனா ஜெயக்குமார் ஆலம் விழுதுகள்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஜெயக்குமார், திருவண்ணாமலைக்காரர் என்ற முறையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர். மீனா ஜெயக்குமார், திமுகவில் இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவுக்கு திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவி கிடைத்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் என கூறப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு, உட்கட்சி பூசலால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலேயே, மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மீனா ஜெயக்குமார் சுமத்தியிருந்தார். இதனால், கட்சியில் இருந்து சில காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்த நிலையில் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை இன்று மாலை நிறைவு பெற்றது. 6.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து கிளம்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மீனா ஜெயக்குமார், "இந்த சோதனையில் அதிகாரிகள் இங்கிருந்து எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை, ஒரு ரூபாய் கூட எடுத்துச் செல்லவில்லை. எதற்காக எனது இல்லத்தில் சோதனை நடந்தது என்பதே புதிராக உள்ளது. எங்களிடம் அமைச்சர் தொடர்பான ஆவணங்களைக் கேட்டார்கள். அது எதுவும் எங்களிடம் இல்லை.
எங்களின் எல்லா வங்கி கணக்கு விவரங்களையும் எடுத்துக் கொடுத்தோம். அவற்றை ஆய்வு செய்தனர். எல்லா கணக்குகளையும் சரியாக நாங்கள் கொடுத்து, அதனை அவர்கள் சரிபார்க்கத்தான் தாமதம் ஆனது. எங்கள் வீட்டில் எங்களையோ, பணியாளர்களையோ ஐ.டி அதிகாரிகள் துன்புறுத்தவில்லை.
எனக்கும் அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது கணவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவண்ணாமலை தான். எனது கணவரின் அப்பாவை அவருக்கு நன்றாகத் தெரியும். ஒருமுறை அவர் கோவை வந்தபோது பொங்கலூர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முதல் அங்கிளுக்கு நன்றாகத் தெரியும். எப்போது சென்னை சென்றாலும் எனது கணவர் அமைச்சரை பார்ப்பார். அவர் இங்கே வந்தாலும் பார்ப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications