கோவை மக்களே தண்ணீரை சிக்கனமா பயன்படுத்துங்க.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பில்லூர் 1 மற்றும் 2 ஆகிய குடிநீர்த் திட்டத்தில் குழாய்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சில பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் இருக்கும் மாநகராட்சிகளில் கோவை மாநகராட்சியும் ஒன்றாகும். கோவை மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அமை, மேட்டுப்பாளையத்தை அடுத்த பில்லூர் அணை மற்றும் பொள்ளாச்சி ஆழியாறு அணை ஆகியவை உள்ளன.

கோவை மாநகராட்சியைப் பொருத்தவரை சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 ஆகிய திட்டங்கள், வடவள்ளி - கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஆழியாறு அணையின் நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணையின் குடிநீர்த் திட்டங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு மேற்கொள்வது வழக்கம். அந்த சமயங்களில், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படும்.
அந்த வகையில், பில்லூர் 1 மற்றும் 2 ஆகிய குடிநீர்த் திட்டத்தில் குழாய்களில் பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாள்களுக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் குடிநீர் விநியோக நாட்களில் இடைவெளி அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்து கொண்டுவரும் பிரதான குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணிகள் 24.022025 முதல் 25.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், பில்லூர் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், சங்கலூர் ரோடு கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ உ சி பூங்கா, சித்தாபுதூர், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு












Click it and Unblock the Notifications