கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கலந்துரையாடல் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய அதிகாரிகள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Kamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ
கோவை: கமல் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி பெறவில்லை என கூறி தேர்தல் பறக்கும் படையினர் பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கோவையில் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்த நிலையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவர்களுடன் கமல் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் நிகழ்ச்சிக்கான அனுமதியை பெறவில்லை என கூறினர்.
மேலும் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியது தவறு என கூறி நிகழ்ச்சியை பாதியில் முடிக்க வைத்தனர். இதனால் கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications