கோவை அருகே ஆதிவாசியை மிதித்து கொன்ற காட்டு யானை.. பொதுமக்கள் பீதி
கோவை அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
கோவை: கோவை அருகே யானை தாக்கி ஒருவர் பலியானார். உயிரிழந்தவர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த ஆதிவாசி ஆவார்.
போளுவாம்பட்டி வனச்சரகம் அருகே உள்ளது தானிக்கண்டி என்ற மலைவாழ் கிராமம். இங்கு வசித்து வருபவர் நஞ்சன். இவர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டு, தன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

கீழே தள்ளியது
அப்போது அவரை யானை ஒன்று வழி மறித்துள்ளது. யானையை கண்டதும் பயந்து நடுங்கிய நஞ்சன் அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனாலும் யானை அவரை விரட்டி சென்று கீழே தள்ளி பலமாக தாக்கி மிதிக்க தொடங்கியது.

பிளிறல் சத்தம்
யானை நஞ்சனை மிதிக்கும்போது பிளிறிக் கொண்டே மிதித்ததால் அந்த சத்தத்தை கேட்டு மலைவாழ் மக்கள் ஓடிவந்தனர். ஆனால் ஆட்கள் வருவதற்குள் நஞ்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

7 ஏக்கரில் வாழை
போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை விரைந்து வந்த அவர்கள் நஞ்சன் உடலை மீட்டு சென்றனர். இதேபோல, ஆலாந்துறை அருகே சாமிபையன் என்பவர் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஆவார். இவரது தோட்டத்தில் 7 ஏக்கரில் வாழை பயிரிட்டிருந்தார். இந்த தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த வாழைகளை தின்றும் மரங்களை நாசம் செய்து போய்விட்டது.

வேண்டுகோள்
இதுபோல, காட்டு யானைகள், தொடர்ந்து பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலையும், விவசாய நிலங்களையும் பாழ்படுத்தியும் வருவதால், அவைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications