கோவை அருகே தீ பிடித்து எரிந்த தனியார் பஸ்.. என்ன நடந்தது?
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்றில் திங்கட்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருமத்தம்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகரித்ததால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்தது.

விசாரணை
பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications