உங்களுக்கெல்லாம் புத்தி இல்லை.. எத்தனை பேர் சாக கிடக்கிறாங்க.. கட்சியினருக்கு எதிராக கொதித்த மக்கள்
அரசு ஆஸ்பத்திரி முன்பு அமைச்சரை வரவேற்க பட்டாசு வெடிக்கப்பட்டது.
Recommended Video

கோவை: "உங்களுக்கெல்லாம் புத்தி இல்லை.. எத்தனை பேர் சாகக்கிடக்கிறாங்க உள்ளே" என்று அமைச்சரை வரவேற்பதற்காக அரசு ஆஸ்பத்திரி அருகே பட்டாசு வெடித்தவர்களிடம் பொதுமக்கள் கொதித்து போய் கேட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சியோகிராம் சேவை மற்றும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஆகியவற்றை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார்.
இதற்காக அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சரை வரவேற்பதற்காக அதிமுக நிர்வாகிகள் தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர். சாலையில் இருந்து ஆஸ்பத்திரி வளாகம் வரை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பிறகு அமைச்சர் வரும்போது சரவெடி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

காதை பிளந்தது
ஆஸ்பத்திரிக்கு முன்பு இப்படி பட்டாசுகள் வெடித்து சிதறியதால், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், வண்டி ஓட்டிகொண்டிருந்தவர்கள் எல்லாரும் அப்படியே நின்றுவிட்டனர். பெண்கள், குழந்தைகள் எல்லாம் பட்டாசு சத்தம் காதை பிளந்ததால் ஓடிபோய் சாலை ஓரத்தில் நின்று கொண்டு காதை மூடிக் கொண்டனர். இந்த சத்தம் போதாதென்று மேளம் கொட்டப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த இடமே புகை மண்டலமானது. பொதுமக்கள் மூக்கையும் மூடிக்கொண்டனர்.

சாகக்கிடக்கிறாங்க
இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆஸ்பத்திரிக்குள் ஒருவர் மேளம் கொட்டி அமைச்சரை வரவேற்றார். இதனால் கடுப்படைந்த மக்கள், ஆஸ்பத்திரியை சுட்டிக்காட்டி, "எத்தனை பேர் சாகக்கிடக்கிறாங்க உள்ளே.. இதெல்லாம் உங்களுக்கே தெரிய வேணாமா? உங்களுக்கெல்லாம் புத்தி இல்லையா? ஹாரன் அடிக்கிறதே இந்த இடத்துல தப்பு. பேஷன்ட்ங்க என்ன ஆவாங்க?

கேட்க மாட்டீங்களா?
இவ்வளவு போலீஸ் இங்கே இருக்கீங்களே.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? எவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.. உங்களுக்கு பாக்கெட் மட்டும் நிறைஞ்சா போதும்.. " என்று கொதித்துபோய் கேட்டனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி கொண்டிருக்கிறது.

பட்டாசு சத்தம் ஆஸ்பத்திரி முன்பு அதிக சத்தம் எழுப்பக்கூடாது என்பது எழுதப்பட்ட விதி. இருந்தாலும் அரசு விழா, முதல்வர், அமைச்சர்கள் வருகையின்போது பட்டாசு வெடிப்பது என்பது எழுதப்படாத விதியாகவே தொன்றுதொட்டு இருக்கிறது.
ஆஸ்பத்திரி முன்பு அதிக சத்தம் எழுப்பக்கூடாது என்பது எழுதப்பட்ட விதி. இருந்தாலும் அரசு விழா, முதல்வர், அமைச்சர்கள் வருகையின்போது பட்டாசு வெடிப்பது என்பது எழுதப்படாத விதியாகவே தொன்றுதொட்டு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications