டிடிஎப் வாசன் பிரச்சனையில் சிக்கவில்லை.. பிரச்சனை தான் டிடிஎப் வாசனிடம் சிக்கியிருக்கு.. பாருங்க
கோவை: கோவையைச் சேர்ந்த பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையில் முடிகிறது. பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வீடியோ போட்டு வந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் அதிவேகமாக சென்ற வீடியோக்களால் சிறைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பிரச்சனை டிடிஎப் வாசனை தேடி வந்தது. இந்நிலையில் மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள்.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டை சேர்ந்த டி.டி.எப்.வாசன்,பிரபலமான யூடியூபர் ஆவார். இவர், விலையுயர்ந்த சொகுசு பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்வார். லடாக் பயணம் தொடங்கி காஷ்மீர், டெல்லி உள்பட பல்வேறு இடங்களுக்கு பைக்கில் சென்று வந்து வீடியோக்களை பதிவிடுவார். பைக்கில் செல்லும் போது அதிவேகமாக சென்றும், சாகசம் செய்து பயணிப்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருந்தார். இதற்காக வழக்குகளில் சிக்கினார். ஒரு வழக்கு, இரு வழக்கு அல்ல.. பல வழக்கில் சிக்கினார்.

காஞ்சிபுரம் அருகே நடந்த விபத்தின் காரணமாக கை உடைந்த நிலையில், கைதும் செய்யப்பட்டார். அப்போது அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக காரை அஜாக்கிரதையாக ஓட்டியும் அதனை வீடியோவாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி வழக்கை சந்தித்தார். இப்படி பல பிரச்சனைகளால் வீடியோவால் சிக்கி தவித்தார்.
இந்தநிலையில் யூடியூபர் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்து போஸ் கொடுத்தபடி வீடியோ வெளியிட்டார். மேலும் அந்த வீடியோவில், தான் அந்த மலைப்பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.. இதையடுத்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே டி.டி.எப்.வாசனின் சொந்த ஊரான கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள அவரது வீட்டிற்கு காரமடை வனத்துறையினர் நேற்று நேரில் சென்று சோதனை நடத்தினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக யூடியூபர் டி.டி.எப்.வாசன் வீட்டில் வனத்துறை சார்பில் சோதனை செய்தோம். அவர் வீட்டில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட விலங்குகள், பிராணிகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்து ஆய்வு செய்தோம் . ஆனால் அப்படி எந்த விலங்குகளும், பிராணிகளும் அவர் வீட்டில் இல்லை. இந்த சோதனை தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளோம்' என்று கூறினார்கள்.
வனத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள்,டிடிஎப் வாசன் பிரச்சனையில் சிக்கவில்லை.. பிரச்சனை தான் டிடிஎப் வாசனிடம் சிக்கியிருக்கு என்று விமர்சித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications