கோவையில் ஆளுநர் பங்கேற்ற விழாவில் ஏசி இயந்திரத்தில் கேஸ் லீக்காகி புகை.. பரபரத்த கல்லூரி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற ஒரு கல்லூரி விழாவில் ஏசி பழுதடைந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி விழா மேடை அமைக்கப்பட்டது.

அங்கு டவர் ஏசி இயந்திரங்கள் இரு புறமும் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவருக்கு கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களும் சிறப்பான வரவேற்பை தந்தனர்.

Gas and smoke leakage in AC machine with high sound in Governor function

ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவை தொடங்கி வைப்பதற்காக அமர்ந்திருந்தார். அப்போது திடீரென ஏசி இயந்திரத்தில் இருந்து பயங்கர சப்தம் ஏற்பட்டது. பின்னர் கேஸ் லீக்காகி புகையும் வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி நிர்வாகத்தினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+