ஆனைமலை டூ தருமபுரி டூ சென்னை! கோயம்பேட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் கைதானது எப்படி?
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடித்த விஜய் சிம் கார்டு வாங்க சென்ற போது சென்னை கோயம்பேட்டில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக் கடை ஜோஸ் ஆலுக்காஸ். மிகவும் பரபரப்பான சாலையில் இயங்கி வரும் இந்த நகைக் கடையை கடந்த நவம்பர் 27ஆம் தேதி பணியாளர்கள் கடையை அடைத்துவிட்டு சென்றனர். பின்னர் 28ஆம் தேதி கடையை திறந்தனர்.

அப்போது ஒரு குறிப்பிட்ட பிரிவில் நகைகள் மாயமானதை அடுத்து மேலாளரின் அறிவுறுத்தலின்படி நகைகள் சரிபார்க்கப்பட்ட போது 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்துதான் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நகைக் கடைக்குள் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள்ளாக மர்ம நபர் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. ஒரே இடத்தில் இருந்து நகைகளை திருடாமல் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளார். 5 தனிப்படைகள் அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு பக்கத்தில் கட்டுமான வேலைகள் நடந்து வருகிறது. அங்கிருப்போரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
மர்ம நபர் குறித்து சில தடயங்கள் கிடைத்துள்ளன. அவர் பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்துள்ளார். அங்கு நகைகளை திருடிவிட்டு பின்னர் தனது சட்டையையும் முகமூடியையும் அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பியுள்ளார். ஆட்டோவில் உக்கடம் பேருந்து நிலையம் சென்ற அவர் அங்கிருந்து பொள்ளாச்சி சென்றுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீஸார் பொள்ளாச்சி , ஆனைமலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போலீஸாருக்கு கிடைத்த தகவல்களை வைத்து நகைக் கடையில் கொள்ளையடித்தவர் தருமபுரி மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் என்பது தெரியவந்தது.
அவருக்கு ஆனைமலை பகுதியில் வீடு இருப்பதை அறிந்த போலீஸார் அங்கு சோதனையிட்டு நகைகளை அங்கிருந்து மீட்டனர். அது போல் அரூரில் விஜயகுமாரின் வீட்டில் சோதனையிட்ட போது அங்கு தங்கநகைகளை அவருடைய தாயிடம் இருந்து மீட்டனர். விஜயகுமார் எங்கே இருக்கிறார் என போலீஸார் தேடி வருகிறார்கள். அது போல் அவருடைய மாமியார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளைக்கு ஐடியா போட்டுக் கொடுத்தவர் விஜய்யின் மனைவி என தெரியவந்தது. அவர் வைத்திருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் விஜய்யை தனிப்படை போலீஸார் கிருஷ்ணகிரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்த நிலையில் மாலை அணிந்து கொண்டு சாமி வேடத்தில் இருந்த விஜயக்குமாரை தனிப்படை போலீஸார் நேற்று கோயம்பேட்டில் வைத்து கைது செய்தனர்.
இதுகுறித்து கோவை துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், விஜய்யை பிடிப்பது மிகவும் சவாலானதாக இருந்தது. அவர் கோவை நகைக் கடைக்கு வந்தது முதல் ஆனைமலை போனது வரை 300- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.
ஆணைமலை, தருமபுரி என ஓடி ஒளிந்த விஜய் திடீரென சென்னை சென்றுவிட்டார். அங்கு கோயம்பேட்டில் ஒரு மொபைல் கடைக்கு ஐயப்ப பக்தர் போல் வேடமிட்டு சென்ற விஜய் , சிம் கார்டு வாங்க முற்பட்டார். அப்போது தனிப்படை போலீஸார் விஜய்யை மடக்கி பிடித்தனர் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications