Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை கொடுத்த "மாஸ்டர் பிளான்".. அதிமுகவின் கொங்கு பவரை ஆட்டி பார்த்த திமுக.. தட்டி தூக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: அதிமுகவின் முக்கியமான கொங்கு பெல்ட் மாவட்ட நிர்வாகிகள் சிலர் நேற்று திமுகவில் இணைந்தனர். ஆனால் இந்த இணைப்பு வெறும் தொடக்கம்தான், முக்கிய நிர்வாகிகள் மேலும் திமுக பக்கம் தாவுவார்கள் என்று தகவல்கள் வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிமுக அரசில் நடந்த ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன. அதிமுகவின் முக்கியமான முன்னாள் அமைச்சர்கள் பலர் இந்த முறைகேட்டு புகார்களில் சிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஒரு பக்கம் ஆளும் கட்சி தரப்பில் இருந்து அதிமுகவிற்கு பிரஷர் வந்து கொண்டு இருக்கும் போது, இன்னொரு பக்கம் சசிகலா தரப்பு அதிமுகவிற்கு கடும் பிரஷரை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா வேகமாக செயல்பட்டு வருகிறார். தினமும் ஒரு ஆடியோ என்று பல்வேறு அதிமுக உறுப்பினர்களிடம் போனில் பேசி, அதை இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.

100 ஆடியோ

100 ஆடியோ

கிட்டத்தட்ட 100 ஆடியோக்களை இதுவரை வெளியிட்டுவிட்டார். ஆனால் ஆடியோ வெளியிடுகிறாரே தவிர முறையாக அதிரடி ஆக்சன் எதிலும் அவர் இறங்கவில்லை. இன்னொரு பக்கம் அதிமுகவோ சசிகலாவோடு பேசினாலே ஆக்சன் என்று அதிரடியாக முடிவெடுத்துள்ளது. சசிகலாவோடு பேசும் நபர்களை யோசிக்காமல் தொடர்ந்து கட்சியில் இருந்து அதிமுக நீக்கி வருகிறது.

நீக்கம்

நீக்கம்

வரிசையாக சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும்

மீண்டும்

பின் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சார்ந்த வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன் ஆகியோர் உட்பட சில கொங்கு மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

எப்படி

எப்படி

இப்படி முக்கியமான அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்ட நிலையில், இவர் அமமுகவில் இணைவார்கள், அல்லது சசிகலாவுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. மாறாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து இவர்கள் நீக்கப்பட்ட உடனே உள்ளே புகுந்து திமுக இவர்களை தட்டி தூக்கி உள்ளனர்.

பின்னணி

பின்னணி

ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சார்ந்த அதிமுக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், அதிமுக கோபி நகர் செயலாளர் காளியப்பன் ஆகியோர் நேற்று திமுகவில் இணைந்தனர். இவர்கள் இருவரும் அதிமுகவிற்காக காலங்காலமாக தேர்தல் பணிகளை, களப்பணிகளை கொங்கு பகுதிகளில் செய்து வந்தவர்கள். ஆனால் தற்போது திடீரென திமுக பக்கம் தாவி உள்ளது. சசிகலாவோடு பேசிய நிலையில், அமமுக செல்லாமல் திமுகவை தேர்வு செய்துள்ளனர்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் திமுக தரப்பில் ஈரோடு மாவட்ட தலைகள் சிலர் பேசியதின் பெயரில்தான் இவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அதோடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சிலர் விட்ட தூது மூலம் இவர்கள் அதிமுகவில் இருந்து அமமுக செல்லாமல் திமுகவிற்கு ரூட்டை மாற்றி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சசிகலா தரப்பு இப்போது எதுவும் செய்யாது, திமுக பக்கம் வந்துவிடுங்கள் என்று பேசி, உள்ளே இழுத்ததாக கூறப்படுகிறது.

பவர் ஹவுஸ்

பவர் ஹவுஸ்

இவர்கள் எல்லோரும் அதிமுகவின் கொங்கு மாவட்ட பவர் ஹவுஸ் போல பார்க்கப்பட்டனர். ஈரோடு,கோபி பகுதியில் காலங்காலமாக அதிமுகவில் பார்த்த முகங்கள் இவர்கள். இவர்கள் மட்டுமின்றி இன்னும் சிலர் வரும் நாட்களில் திமுக பக்கம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் இவர்கள் இணைந்து இருப்பது கொங்கு மாவட்டத்தில் அந்த கட்சிக்கு பெரிய பலம் சேர்க்கும். உள்ளாட்சி தேர்தலிலும் அக்கட்சி இது பெரிய உதவியாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+