டிரம்ப் ஆடும் ஆட்டத்தால்.. திருப்பூர், கோவைக்குத்தான் பெரிய ஆபத்து.. எதிர்பார்க்காத சிக்கல்.. போச்சு
கோவை: அமெரிக்கா விதித்துள்ள 25% கூடுதல் வரியால், இந்திய ஜவுளித் தொழில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், இந்தியாவிலிருந்து கொள்முதலை பிற நாடுகளுக்கு மாற்றுவது, ஆட்குறைப்பு, சில அலகுகளை மூடுவது போன்ற நிலைமைகள் ஏற்படலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
50% பரஸ்பர வரியைச் சமாளிக்க முடியாமல், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்தியச் சிறு ஆடை ஏற்றுமதியாளர்களில் சுமார் 80% பேர் நஷ்டமடைந்து இந்த துறையை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம், பெரிய நிறுவனங்கள் தள்ளுபடிகளை வழங்கி, மாற்று ஏற்றுமதி சந்தைகளை.. அதாவது வேறு நாட்டு சந்தைகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.

டிரம்ப் இறக்குமதி வரி - கோவைக்கு பாதிப்பு
இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களின் அதிகாரபூர்வ அமைப்பான ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் ( இது பற்றி கூறுகையில், பெரியவர், சிறியவர் என எந்த ஏற்றுமதியாளரும் இவ்வளவு அதிக வரிகளை ஏற்க முடியாது. நிதி ஆதாரமும், இருப்பும் குறைவாக உள்ள பல சிறிய ஏற்றுமதியாளர்கள் காணாமல் போவார்கள். வாங்குபவர்கள் ஆர்டர்களை ரத்து செய்யத் தொடங்கிவிட்டனர், புதிய ஆர்டர்களைக் கொடுக்க தயங்குகின்றனர், என்றார்.
"எங்களிடம் உள்ள மொத்த ஏற்றுமதியாளர்களில், 20% ஏற்றுமதியாளர்கள் 80% ஏற்றுமதியைச் செய்கின்றனர். அதேசமயம், மீதமுள்ள 80% ஏற்றுமதியாளர்கள் (மைக்ரோ மற்றும் சிறிய நிறுவனங்கள்) 20% ஏற்றுமதியைச் செய்கின்றனர். எனவே, 80% ஏற்றுமதியாளர்கள் நஷ்டத்தைத் தாங்க முடியாமல் மூடப்படலாம்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீனாவிற்கு போகும் ஏற்றுமதி
அமெரிக்காவில் உள்ள வாங்குபவர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களிடம், சில ஆர்டர்களை இந்தியாவிலிருந்து சீனா போன்ற நாடுகளுக்கு மாற்றப் போவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரிய ஏற்றுமதியாளர்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு நெருக்கடியைச் சமாளிக்க முடியும். அவர்களால் சில காலத்திற்கு நஷ்டத்தைத் தாங்க முடியும். ஆனால், இந்தக் காலத்திற்குப் பிறகு அவர்களும் சிரமப்படுவார்கள், ஏனெனில் இந்த வரிகளின் சுமையை அவர்கள்தான் தாங்க வேண்டும்.
இது ஜவுளி அலகுகளை மூடுவதற்கும், பெரிய அளவிலான ஆட்குறைப்புக்கும் வழிவகுக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர். இந்தக் கூடுதல் 25% வரி விதிக்கப்பட்டால், வாங்குபவர்கள் இந்தியாவிலிருந்து கொள்முதலை மாற்றுவார்கள். பல ஆட்குறைப்புகளும், சில அலகுகள் மூடப்படுவதும் நிகழலாம். இது ஜவுளித் துறைக்கு ஒரு பேரழிவை உருவாக்கும்.
டிரம்ப் நடவடிக்கையால் இந்தியாவிற்கு இழப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்திற்கு இந்தியாவின் ஆடை ஏற்றுமதி 7% முதல் 12% வரை அதிகரித்திருந்தாலும், வரிகள் காரணமாக வரும் காலத்தில் ஏற்றுமதி அளவு பாதிக்கும்.. இந்த ஏற்றுமதி அளவு கடுமையாக சரிவை சந்திக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா மீது கூடுதல் வரி
டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது அமெரிக்காவிற்கு அசாதாரணமான மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை கவலைகள் மற்றும் பிற வர்த்தக சட்டங்களை மேற்கோள் காட்டி அவர் இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதித்தார்.
இந்த உத்தரவுக்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கான மொத்த வரி 50% ஆக உயரும். ஆரம்ப வரிகள் ஆகஸ்ட் 7 அன்று அமலுக்கு வரும் நிலையில், கூடுதல் வரி 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வரும். இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இந்திய ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த மறுக்கிறது. இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. அதை அதிக லாபத்திற்கு வெளிச்சந்தையில் விற்கிறது. இதனால் வரி கணிசமாக அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications