கோவையில் ஆதித்யநாத்.. சாரை சாரையாக பைக்கில் வந்த இளைஞர்கள்.. பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல்!
கோயம்புத்தூர்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையை அடுத்து கோவை டவுண்ஹால் அருகே பாஜகவினர் பெரிய அளவில் பைக் பேரணியை நடத்தினர். இதனால் கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக தமிழக தலைவர் எல். முருகனை அதிகரித்து மோடி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் இன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம்
இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தவர் புலியகுளத்திற்கு சென்று கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் தேர்முட்டி சென்றார். அங்கு பாஜக வேட்பாளர் வானதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக பாஜகவினர் பைக்கில் கோவை முழுக்க பெரிய அளவில் பேரணி நடத்தினார்கள்.
|
பேரணி
ஆதித்யநாத் வருகையை அடுத்து கோவை டவுண்ஹால் அருகே பாஜகவினர் பெரிய அளவில் பைக் பேரணியை நடத்தினர். பைக்கில் சாரைசாரையாக கூட்டம் கூட்டமாக பலர் வந்தனர். எல்லோரும் காவி கொடி ஏந்தியபடி பிரச்சாரம் செய்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார்கள்.

வடஇந்தியர்கள்
கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் பலர் இங்கு பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த சில தினங்களாக வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வடஇந்திய பெண்கள் பிரச்சாரம் செய்தது போல இன்றும் வடஇந்தியர்கள் பலர் யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி பிரச்சாரம் செய்தனர்.
— The DEPRESSED philosopher (@Lol_Philosopher) March 31, 2021 |
பைக்
பைக்கில் இப்படி பலர் ஒன்றாக வந்ததால் கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு சில இடங்களில் கடைகளை மூடும்படி இவர்கள் கூறியதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்னொறு பக்கம் யோகி ஆதித்யநாத் பிரச்சார பகுதியிலும் பலர் காவி கொடியுடன் காணப்பட்டனர்.

கோஷம்
ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹிந்த் கோஷங்களை எழுப்பி வானதிக்காக பிரச்சாரம் மேற்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.












Click it and Unblock the Notifications