எஸ்டிபிஐ அலுவலகத்தில் ‘இன்கம் டேக்ஸ்’ திடீர் ரெய்டு.. திரண்ட தொண்டர்கள்.. குவிந்த போலீஸ்.. பரபரப்பு!
கோவை : கோவை உக்கடம் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் எஸ்டிபிஐ அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட தகவல் பரவி, அக்கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தியதால அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், வருமான வரித்துறை இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லை முபாரக் விடுத்துள்ள அறிக்கையில், "எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில், சோதனை என்ற பெயரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தனது கைப்பாவையான மத்திய வருமான வரித்துறையின் மூலமாக ஏவிவிடும் ஒன்றிய பாஜக அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் ஜனநாயகத்தின் குரலை நசுக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அராஜக அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications