கோவை, தஞ்சையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு... சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கிய காளையர்கள்!
கோவை: கோவை, தஞ்சாவூரில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர்.
Recommended Video

சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
கோவையில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவையில் ஜல்லிக்கட்டு
கோவையில் வெற்றிகரமாக நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்றுள்ளன. 750 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் தீரத்துடன் அடக்கினர்.

மருத்துவக் குழு தயார் நிலை
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 12 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைகள் முடிந்து சான்றிதழ் வைத்திருக்கும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால் நடைத்துறையின் மூலம் குழு அமைக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசு கார்
சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக சிறந்த மாடுபிடி வீரருக்கும் மற்றும் சிறந்த காளைக்கும் மாருதி கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல் தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பேராலைய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

காளைகளை அடக்கிய காளையர்கள்
இதில் 600 காளைகள்பங்கேற்றுள்ளன. 450 மாடுபிடி வீரர்கள் களத்தில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கி வருகின்றனர். தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் போட்டியில் கலந்து கொண்டது. 15 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications