6 வயது மலரை கருக்கிய காம கொடூரனுக்கு தூக்கு.. கோவை போக்சோ கோர்ட்டின் முதல் அதிரடி மரண தண்டனை..!
6 வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Recommended Video

கோவை: சில்மிஷம், டார்ச்சர், பலாத்காரம் என்று இனி ஒரு பயலும் வாலாட்ட முடியாது.. ஒட்ட நறுக்க சாட்டையை கையில் எடுத்துள்ளது கோவை போக்சோ கோர்ட்.. முதன்முறையாக 6 வயது குழந்தையை நாசம் செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தந்து உத்தரவிட்டுள்ளது!
சமீப காலமாக கோவை மாவட்டத்தில் ஏராளமான குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன.. இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் ஒரு எல்லையே இல்லாமல் அதிகரித்து வருகின்றன. கல்லூரி, பள்ளி, டியூஷன்கள் என இந்த பெண்கள் எங்கு போனாலும், பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்பட்டு வருகின்றன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, கோவை தடாகம் பக்கத்தில் 6 வயது சிறுமியை நாசம் செய்து கொலை செய்தனர்.. இதற்கு பிறகு பொள்ளாச்சி கும்பலின் அட்டகாசம் வெளியே வந்தது.. இந்த அதிர்ச்சி முடிவதற்குள் காளப் பட்டி அருகே சிறுமி ஒருத்தியை சீரழித்து கொன்றனர்.. இன்னும் எத்தனை குழந்தைகள், இளம்பெண்கள் காமவெறியர்களுக்கு வேட்டையாடப்பட்டனர்.. இவர்களில் பலர் கைதாகினாலும், பாலியல் அக்கிரமம் இன்னும் தொடர்ந்தபடியேதான் உள்ளது.
இதனிடையே, அதாவது, கடந்த 2018 ஏப்ரல் மாதம் போக்சோ சட்ட திருத்தம் புதிதாக கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்கவும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் இருப்பதுதான் இந்த போக்சோ சட்டம்.. இதன்படி குற்றவாளிக்கு குறைந்த பட்சம் 7 முதல் அதிகப்பட்சமாக ஆயுள் வரை தண்டனை விதிக்கப்படும்.
பெரும்பாலும் மகளிர் கோர்ட்களில் இந்த போக்சோ கேஸ்கள் விசாரிக்கப்பட்டதால், கோவை மாவட்டத்தில் நிலுவை வழக்குகள் அதிகமாகிவிட்டன. அதனால் போக்சோவுக்கு என்றே தனியாக ஒரு சிறப்பு கோர்ட் அமைக்க சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது. கோவை மாவட்டத்தில் மட்டும், 125 போக்சோ வழக்குகள் தேங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.
இதையடுத்து, உரிய அனுமதியை பெற்று கோவையில் சிறப்பு கோர்ட் உருவானது. இப்போது பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க இந்த கோர்ட் மிக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில்தான் கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியின் கை, காலை கட்டி, பலாத்காரம் செய்த வழக்கில் 32 வயது சந்தோஷ்குமார் என்பவர் கைதானார்.
இது சம்பந்தப்பட்ட வழக்கை இந்த போக்சோ கோர்ட்தான் இதுநாள் வரை விசாரித்து வந்த நிலையில், இன்று சந்தோஷூக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. போக்சோ கோர்ட்டில் முதல் முதலாக வழங்கப்படும் தூக்கு இதுவாகும்.. பெண் குழந்தைகளை சீரழித்தால், அதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு உதாரணம் ஆகும்!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications