Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்து முன்னணி அட்டாக்.. திருவிழாவான திறப்புவிழா! களைகட்டிய கோவை -பெரியார் பிறந்தநாளில் உதித்த உணவகம்

Subscribe to Oneindia Tamil

கோவை: காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் இந்து முன்னணியினரால் தாக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் மீண்டும் அதே இடத்தில் பெரியார் பிறந்தநாளான இன்று கடை கோலாகலமாக திறக்கப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ளது கண்ணார்பாளையம் பகுதி. இங்குள்ள நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை கடந்த 13 ஆம் தேதி திறந்தார்.

அப்போது, அங்கு உள்ளே சென்ற இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் பெரியார் உணவகத்தின் உரிமையாளர் பிரபாகரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கி உணவகத்தை அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்த தாக்குதலில் உணவக ஊழியர் அருண் படுகாயமடைந்து காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 36 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் பிரபாகரனும் காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்றார்.

 போலீசில் புகார்

போலீசில் புகார்

இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பெரியாரிய அமைப்புகள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வந்தனர்.

இந்து முன்னணி

இந்து முன்னணி

இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோரை காரைமடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைவரும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

6 பிரிவுகளில் வழக்கு

6 பிரிவுகளில் வழக்கு

கைதானவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசியது, அத்துமீறியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் பிரபாகரன் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாளன்று மீண்டும் கடையை திறப்போம். என்று கூறியுள்ளார்.

பிரம்மாண்ட திறப்பு விழா

பிரம்மாண்ட திறப்பு விழா

இந்த நிலையில் பெரியார் பிறந்தநாளான இன்று தந்தை பெரியார் உணவகம் அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. கடந்த முறை எளிமையான முறையில் திறக்கப்பட்ட இந்த உணவகம் இன்று மக்கள் கூட்டம் திரளி பிரம்மாண்ட முறையில் திறக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை ராமகிருட்டிணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+