கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்பியை முதலில் விசாரிக்க வேண்டும்.. அதிகரிக்கும் குரல்கள்!

பொள்ளாச்சி விவகாரத்தில் எஸ்பி பாண்டியராஜனை விசாரிக்க கோரிக்கை எழுந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி வழக்கு... எஸ்பியை விசாரிக்க வலுக்கும் கோரிக்கை

    கோவை: "ஏங்க.. முதல்ல எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க" என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையிலேயே சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

    பொள்ளாச்சி விஷயம் வெடித்து கிளம்பியது... 20 பேர் கொண்ட கும்பல்... 1500 வீடியோக்கள்.. 400-க்கும் மேற்பட்ட பெண்கள் என்று திகில் மற்றும் பகீர் சமாச்சாரங்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியதுபோல வந்து ஒவ்வொன்றாக விழ ஆரம்பித்தது.

    இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த மங்கலான முதல் வீடியோ கசிந்தது. இந்த சமயத்தில் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்பி பாண்டியராஜன்.

    எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்! எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்!

    அரசியல் தொடர்பு இல்லை

    அரசியல் தொடர்பு இல்லை

    "பலாத்காரம் தொடர்பாக 100, 200 வீடியோக்கள் எல்லாம் இல்லை.. வெறும் 4தான்... சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்துட்டோம். இதில் வேறு எந்த அரசியல் தொடர்பும் இல்லை" என்று சத்தியம் பண்ணாத குறையாக இதை சொன்னதுடன், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான அடையாளங்களையும் வெளியிட்டார்.

    கண்டிப்பு

    கண்டிப்பு

    கடைசியில் விவகாரம் எங்கெங்கோ சென்று, சிபிஐ, சிபிசிஐடி விசாரணை என மாறி, இந்த விஷயத்தில் கோர்ட் தலையிட்டு எஸ்பி பாண்டியராஜனை கண்டிக்காத குறையாக சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதே மனநிலைதான் தமிழக மக்கள் நிலையும்.

    சிபிஐ விசாரணை

    சிபிஐ விசாரணை

    இப்போது காவல்துறையிலேயே பாண்டியராஜனுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி போலீசாரே இந்த விஷயத்தை கமுக்கமாக முடித்துவிடுவதாக இருந்தது. பிறகுதான் நிலைமை சீரியஸ் ஆகி சிபிஐ-க்கு போனது.

    அவரை விசாரிங்க

    அவரை விசாரிங்க

    இது சம்பந்தமாக பேசிய சில போலீசார், "ஒருவேளை இந்த கேஸை சிபிஐ எடுப்பதாக இருந்தால், முதலில் எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க. அவர் மட்டுமில்லை.. அவர்கூட, பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராம், இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்ஐ ராஜேந்திரபிரசாத், எஸ்எஸ்ஐ ரகு என இவர்கள் யாரையும் விடாதீங்க. எல்லாரையும் கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரணும்.

    நெஞ்சில் ஈரம்

    நெஞ்சில் ஈரம்

    ஏன்னா.. இவங்கதான் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்கிறார்கள், மொத்தமாக ஒன்னுமே இல்லாமல் இந்த கேஸை மூடிமறைக்க பார்க்கிறார்கள். இதற்காக பல பிளான்கள் பக்காவாக நடந்துவருகிறது.. அதனால இவங்கள விட்டுடாதீங்க" என்கின்றனர் அந்த நெஞ்சில் ஈரம் நிறைந்த கோவை காக்கி சட்டை அதிகாரிகள்!

    English summary
    There is a demand for Kovai SP Pandiarajan to inquire into Pollachi Gang Rape Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X