பொள்ளாச்சி விவகாரம்... கோவை எஸ்பியை முதலில் விசாரிக்க வேண்டும்.. அதிகரிக்கும் குரல்கள்!
பொள்ளாச்சி விவகாரத்தில் எஸ்பி பாண்டியராஜனை விசாரிக்க கோரிக்கை எழுந்து வருகிறது.
Recommended Video

கோவை: "ஏங்க.. முதல்ல எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க" என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக காவல்துறையிலேயே சிலர் குரல் எழுப்பி வருகின்றனர்.
பொள்ளாச்சி விஷயம் வெடித்து கிளம்பியது... 20 பேர் கொண்ட கும்பல்... 1500 வீடியோக்கள்.. 400-க்கும் மேற்பட்ட பெண்கள் என்று திகில் மற்றும் பகீர் சமாச்சாரங்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியதுபோல வந்து ஒவ்வொன்றாக விழ ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் அந்த மங்கலான முதல் வீடியோ கசிந்தது. இந்த சமயத்தில் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார் எஸ்பி பாண்டியராஜன்.

அரசியல் தொடர்பு இல்லை
"பலாத்காரம் தொடர்பாக 100, 200 வீடியோக்கள் எல்லாம் இல்லை.. வெறும் 4தான்... சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்துட்டோம். இதில் வேறு எந்த அரசியல் தொடர்பும் இல்லை" என்று சத்தியம் பண்ணாத குறையாக இதை சொன்னதுடன், பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான அடையாளங்களையும் வெளியிட்டார்.

கண்டிப்பு
கடைசியில் விவகாரம் எங்கெங்கோ சென்று, சிபிஐ, சிபிசிஐடி விசாரணை என மாறி, இந்த விஷயத்தில் கோர்ட் தலையிட்டு எஸ்பி பாண்டியராஜனை கண்டிக்காத குறையாக சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதே மனநிலைதான் தமிழக மக்கள் நிலையும்.

சிபிஐ விசாரணை
இப்போது காவல்துறையிலேயே பாண்டியராஜனுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி போலீசாரே இந்த விஷயத்தை கமுக்கமாக முடித்துவிடுவதாக இருந்தது. பிறகுதான் நிலைமை சீரியஸ் ஆகி சிபிஐ-க்கு போனது.

அவரை விசாரிங்க
இது சம்பந்தமாக பேசிய சில போலீசார், "ஒருவேளை இந்த கேஸை சிபிஐ எடுப்பதாக இருந்தால், முதலில் எஸ்பி பாண்டியராஜனை விசாரிங்க. அவர் மட்டுமில்லை.. அவர்கூட, பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராம், இன்ஸ்பெக்டர் நடேசன், எஸ்ஐ ராஜேந்திரபிரசாத், எஸ்எஸ்ஐ ரகு என இவர்கள் யாரையும் விடாதீங்க. எல்லாரையும் கிடுக்கிப்பிடி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரணும்.

நெஞ்சில் ஈரம்
ஏன்னா.. இவங்கதான் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்கிறார்கள், மொத்தமாக ஒன்னுமே இல்லாமல் இந்த கேஸை மூடிமறைக்க பார்க்கிறார்கள். இதற்காக பல பிளான்கள் பக்காவாக நடந்துவருகிறது.. அதனால இவங்கள விட்டுடாதீங்க" என்கின்றனர் அந்த நெஞ்சில் ஈரம் நிறைந்த கோவை காக்கி சட்டை அதிகாரிகள்!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications