மே 15.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கெடு விதித்த கிருஷ்ணசாமி.. திமுக கூட்டணியிலும் பேசப்போறாராமே!
கோவை : மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம், திமுக கூட்டணி கட்சிகளுடனும் இதுதொடர்பாகப் பேசுவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஆன்லைன் ரம்மியால் சொத்துகளை இழந்தார்கள், உயிர்களை இழந்தார்கள். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. ஆனால் டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகளும் நடக்கின்றன. அதனால்தான் டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்துத் தாக்கும் போக்கு இருக்கிறது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது. சட்டமன்றத்திற்குள் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் சொல்வது எல்லாம் ஆபத்தானது. கைகட்டி பார்க்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?
2021ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் இப்போது அதை நிறுத்திவிட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே போய் மோடியிடம் கை தூக்கி நிற்கின்றனர். இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேல் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம்." என்றார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, "மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் . பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவை இல்லை. டாஸ்மாக் கடைகளைப் போல் பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. கரூர் மூலமாக எத்தனை சட்டவிரோத பார்கள் நடக்கிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும்.

மே 15ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்களே மூடுவோம். பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். அதன்பிறகு மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம். தனிநபர் கஜானாவுக்கு பணம் போகிறது. பல இடங்களில் சட்டவிரோதமாக நடக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications