மே 15.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கெடு விதித்த கிருஷ்ணசாமி.. திமுக கூட்டணியிலும் பேசப்போறாராமே!
கோவை : மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம், திமுக கூட்டணி கட்சிகளுடனும் இதுதொடர்பாகப் பேசுவோம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். ஆன்லைன் ரம்மியால் சொத்துகளை இழந்தார்கள், உயிர்களை இழந்தார்கள். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. ஆனால் டாஸ்மாக் மூலம் தான் அனைத்து விதமான சமூக கேடுகளும் நடக்கின்றன. அதனால்தான் டாஸ்மாக் கடைகளை அறவே மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநரை குறி வைத்துத் தாக்கும் போக்கு இருக்கிறது. ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். ஆளுநர்கள் இல்லாமல் மாநில அரசை எண்ணிப் பார்க்க முடியாது. சட்டமன்றத்திற்குள் கைகட்டி சும்மா பார்க்க மாட்டோம் என முதலமைச்சர் சொல்வது எல்லாம் ஆபத்தானது. கைகட்டி பார்க்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?
2021ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன் பறந்தது. ஆனால் இப்போது அதை நிறுத்திவிட்டு சரண் அடைந்துவிட்டனர். குடும்பமே போய் மோடியிடம் கை தூக்கி நிற்கின்றனர். இவர்கள் சங்கிகளாக மாறிவிட்டார்களா? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இனிமேல் திமுக போடும் நாடகத்தை நம்பாதீர்கள். உங்களோடு ரம்ஜான் மாதத்தில் தொப்பி போட்டு வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம்." என்றார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, "மது பழக்கங்களுக்கு காரணமாக இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் . பெண்களை விதவையாக்குவதை நிறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட ஆளுநர் ஒப்புதல் தேவை இல்லை. டாஸ்மாக் கடைகளைப் போல் பார்களில் சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. கரூர் மூலமாக எத்தனை சட்டவிரோத பார்கள் நடக்கிறது என்பதை நிதித்துறை அமைச்சர் ஆய்வு செய்து சொல்ல வேண்டும்.

மே 15ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மூட வேண்டும். இல்லையென்றால் நாங்களே மூடுவோம். பின்னர் டாஸ்மாக் பார்களை மூட போராட்டம் நடத்துவோம். அதன்பிறகு மது தயாரிப்பு ஆலைகளை மூடப் போராட்டம் நடத்துவோம். தனிநபர் கஜானாவுக்கு பணம் போகிறது. பல இடங்களில் சட்டவிரோதமாக நடக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுடனும் பேச இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications