நாகப்பாம்பை பைக்கில் வைத்து 90 கி.மீட்டர் கொண்டு வந்த நபரால் பரபரப்பு
Recommended Video

கோவை: நாகப்பாம்பை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்குள் ஒருவர் நுழைந்ததை பார்த்ததும் எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வாட்ச் மேனாக உள்ளார். 2 நாளுக்கு முன்னாடி, வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது ரோடில் ஒரு நாகப்பாம்பு சுருண்டு படுத்து கிடந்தது. இதைப்பார்த்ததும் சுரேந்திரன் ஷாக் ஆனார். பிறகு அப்படியே கடந்து செல்ல அவருக்கு மனசே வரவில்லை.

90 கி.மீ. தூரம்
அதனால் பைக்கை விட்டு கீழே இறங்கி வந்து, அந்த பாம்பை லபக்கென லாவகமாக பிடித்து கொண்டார். பிறகு ஒரு பையை எடுத்து, அந்த பாம்பை உள்ளே போட்டுவிட்டு, அதனை பைக்கில் மாட்டிக் கொண்டு கிளம்பினார். இப்படியே 90 கி.மீ. தூரம் போனார்.

அலறினர்
பின்னர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனத்துறை கால்நடை மருத்துவமனைக்கு பாம்பை கொண்டு வந்தார். பாம்பை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அலறினார்கள். அங்கு டாக்டர் அசோகன் பாம்பை பரிசோதனை செய்து பார்த்தார்.

கண் தெரியவில்லை
அப்போது, பாம்புக்கு 2 கண்களும் தெரியவில்லை என்றும், இரை கிடைக்காமல் சோர்ந்திருப்பதாகவும் டாக்டர் சொன்னார். பின்னர் சத்தியமங்கலம் தனியார் கண் மருத்துவமனை டாக்டரின் ஆலோசனையின் படி பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் பாம்புக்கு கண் தெரியும் என்று சொல்லப்படுகிறது.

குவிகிறது பாராட்டு
பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என்கிறபோது, பாம்பை பார்த்ததும் ஒதுங்கி போய்விடாமல் அதனை பையில் எடுத்து கொண்டு 90 கி.மீட்டருக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்த சுரேந்திரனின் இந்த செயலுக்கு வனத்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications