கோவை அருகே ராட்சத குழாய் உடைந்து 20 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடித்த குடிநீர்.. போக்குவரத்து முடக்கம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்திற்கு அருவி போல குடிநீர் கொட்டியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில், திருப்பூர் குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் இருந்து பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூருக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் அன்னூர் ரோட்டில் உள்ள நடூர் என்ற பகுதியில் இந்த குடிநீர் குழாயில் அதிக அழுத்தம் காரணமாக திடீரென்று உடைப்பு ஏற்பட்டு பல அடி உயரத்திற்கு தண்ணீர் மேலே பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்திற்கு அருவி போல கொட்டிய குடிநீர்.🌊 pic.twitter.com/VjEd7tYRAX
— Gopalakrishnan Pichai (@Gopalak12365012) May 23, 2025
இது குறித்து குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தண்ணீர் அதிக அளவு வெளியேறி வருவதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications