மிடுக்காக மாறப்போகும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்.. கோவை, நீலகிரி மக்களுக்கு ஜாலி தான்
கோவை: கோவை மாவட்டம் தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதததால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. கோவையின் முக்கிய பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை ரூ.8.63 கோடியில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. தொழில்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கோவை முன்னேறி கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு வருகை புரிகிறார்கள்.

கோவை உள்கட்டமைப்பு
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மைல்கல் பகுதி முதல் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்மநாயக்கன் பாளையம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதல்கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரையிலான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதேபோல காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் போன்ற பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையம் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகரத்தில் உள்ளபேருந்து நிலையம் மிகவும் முக்கியமானது. தினசரி கோவை மற்றும் நீலகிரியில் பல்வேறு பகுதிகளை இணைப்பதுடன் திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சுமார் 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பேருந்து நிலையத்திற்குள்ளேயே வணிக வளாகமும் இருக்கிறது. பழுதடைந்து காணப்படுவதால் அதை மேம்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.63 கோடி கீழ் பேருந்து நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. அதன்படி பழைய கடைகளை இடித்துவிட்டு புதிதாக 26 கடைகள் அமைப்பது, பேருந்து ஓடுதளம், கழிப்பறைகள், பயணிகள் நிழற்கூடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மூலம் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தப் பணிகளை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
80 சதவீத பணிகள்
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பேருந்து நிலையம் புனரமைப்புப் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக தாய்மார்கள் பாலூட்டும் அறை, மின் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் முன்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை கட்டும் பணி தொடங்கவுள்ளது. அந்தப் பணிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடித்து பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
-
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
இத்தோடு விஜய் அரசியல் முடியனும்.. திமுக தீவிரம்.. காங்கிரசிடம் இறங்கிப் போய் கூட்டணி வைத்த ரகசியம்












Click it and Unblock the Notifications