அடுத்த சர்ச்சை.. சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது.. திண்டுக்கல் சீனிவாசன்
சிங்கம் தாக்கினால் அரசு நிவாரணம் வழங்குகிறது என அமைச்சர் பேச்சு.
Recommended Video

கோவை: சிங்கம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்குகிறது என்று கூறி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திரும்பவும் சர்ச்சை வார்த்தைகளை வாரி இறைத்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறை சார்பாக 24 வது மாநில வனத்துறை விளையாட்டு போட்டிகள் கோவை வனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விளையாட்டு கொடியை ஏற்றி , போட்டிகளையும் துவக்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கும்கி - டிமிக்கி
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: கோவையில் கும்கி யானைகளுக்கு டிமிக்கி கொடுத்து காட்டு யானைகள் ஓடி விடுகின்றன. ஆனால் அவை தப்பி எப்படி ஓடுகிறது என்பதே தெரியவில்லை. அதனால் அவற்றை பிடிக்கவும் முடியவில்லை.

சிங்கம், புலி
சிங்கம், புலி தாக்கி உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. யாரும் சிங்கம், புலி தாக்கி வேண்டுமென்றே உயிரிழப்பதில்லை" இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

சிங்கமே இல்லை
தமிழ்நாட்டில் யானைகள் தாக்கிதான் பயிர்களும், மனித உயிர்களும் சேதமாகி வருகிறது. அதேபோல, தமிழ்நாட்டு வனப் பகுதிகளில் ஒரு சிங்கம் கூட இப்போது இல்லை. எல்லா சிங்கங்களும் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில்தான் உள்ளன.

விவசாயிகள் அதிர்ச்சி
எனவே தமிழக காடுகளில் ஒரு சிங்கம் கூட இல்லாத நிலையில் சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பதை கேட்டதும் அங்கிருந்த விவசாயிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications