கோவை மருதமலை அடிவாரத்தில் யானை சாணத்தில் நாப்கின், மாஸ்க்!.. எத்தனை ஆபத்தில் வனவிலங்குகள்?
கோவை: கோவை மருதமலை அடிவாரத்தில் யானையின் சாணத்தில் பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
காற்று மாசு, பருவநிலை மாற்றம், காட்டுத் தீ உள்ளிட்டவைகளுக்கு சுற்றுச்சூழல் சீர்கேடு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அது போல் இந்த பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் வாயில்லா ஜீவன்களான விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பிளாஸ்டிக்குகள்
உணவு பொருட்களில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள், சாலைகளில் இருக்கும் நாய், பூனை, மாடு, கழுதை உள்ளிட்ட விலங்குகள் உண்டால் அதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதற்குத்தான் பிளாஸ்டிக் இல்லாத நாடாக மாற்ற அனைத்து மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.

பாக்கு மரத்தட்டுகள்
பிளாஸ்டிக் பிளேட்டுகளுக்கு மாற்றாக பாக்கு மர தட்டுகள், தையல் இலைகளால் ஆன தொண்ணைகள் உள்ளிட்டவை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கடைகளுக்கு செல்லும் போது துணி பைகளை பயன்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் குப்பைகளையும் கொட்டுவதற்கு முன்னர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்குமாறு கூறப்படுகிறது.

குப்பைகளோடு குப்பை
ஆனால் என்னதான் அரசு அறிவுரை வழங்கினாலும் சிலர் கேட்டபாடில்லை. பிளாஸ்டிக், கவர்கள், நாப்கின்களை குப்பைகளோடு குப்பையாக கொட்டி இந்த மண்ணுக்கு கேடு ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வொருவர் சுவாசிக்கும் காற்றுக்கும் கேடை விளைவிக்கிறார்கள். இது விலங்குகளையும் கடுமையாக பாதிக்கிறது.

மருதமலை அடிவாரம்
அந்த வகையில் கோவை மருதமலை அடிவாரத்தில் யானை ஒன்று சாணம் போட்டுவிட்டு சென்றது. யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அங்கிருந்த சாணத்தை ஆய்வு செய்த போது அதில் பிளாஸ்டிக் கவர், முக்கவசம், நாப்கின்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் இருந்தன. வனப்பகுதியை ஒட்டிய குப்பைக் கிடங்குகளில் இருந்து ஏதேனும் தீனியை யானை உண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது போன்ற அபாயகரமான பொருட்கள் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் உயிருக்கு உலை வைக்கும் என்பதை நம் மக்கள் எப்போதுதான் உணர போகிறார்களோ!
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications