ராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்
Recommended Video

கோவை: கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பாமக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெற பாடுபடாமல் அவர் மகன் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்று ராமதாஸ் நினைப்பதாக பாமகவின் மாநில துணை தலைவராக இருந்து, அக்கட்சியிலிந்து விலகிய பொங்கலூர் ரா.மணிகண்டன் தெரிவித்தார்.
பாமக துணை தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்தார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தான் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சொன்னதன் அடிப்படையில் நாங்கள் ஆவலோடு பணியாற்றினோம்.
இன்று முதல் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கொள்கிறேன். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்று சொன்னார்கள். மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தது. பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது
நேற்று ரஜினி பேட்டி கொடுத்தது தெரியும், இவரை சந்தித்தது தெரியுமா?

மாற்றி பேசுகிறார்கள்
மிகப்பெரிய பேரம் நடந்தது என்று பின்னர் தான் எங்களுக்கு தெரியும். ஒபிஎஸ் - ஈபிஎஸ் பற்றி தடித்த வார்த்தைகளைக் அன்புமணி பயன்படுத்தினார். இது பேர கூட்டணி. மக்கள் இந்த கூட்டணியைக் கேவலமாக பேசி வருகின்றனர். மாற்றி மாற்றி பேசினால் இவர்களைக் எப்படி நம்புவது.

கடைகளில் பணம்
இவர்கள் நடந்துகிற போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றிற்கு பிறகு ஒரு பெரிய பேரம் உள்ளது. மதுவிலக்குப் போராட்டம் நடத்தினால், எங்கு போராட்டம் நடத்துகிறார்களோ அப்பகுதியில் உள்ள கடைகளிலே பணம் வாங்கி விடுவார்கள்.

தன்னிச்சை
கழகங்களைக் பற்றி கடுமையாக புத்தகங்களை எழுதினார். இதற்கு பிறகு மக்கள் மத்தியில் இவர்கள் மீது நம்பிக்கை வருமா.
ராமதாஸ் ஒரு மூத்த அரசியல்வாதி அவரே பொய் பேசலாமா. கட்சியில் யாரையும் கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்கள்.

3 கோடி கடன்
அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள பல நிர்வாகிகள் கட்டபஞ்சாயத்து ,நில அபகரிப்பு செய்து வருகிறார்கள். காடு வெட்டி குரு கட்சிக்கு கடுமையாக உழைத்தவர். அவரது குடும்பம் இன்று ரூ.3 கோடி கடனில் உள்ளது.

துரோகம்
அவர் மறைவிற்கு பிறகு அவர்கள் குடும்பத்திற்கு ஏதும் செய்யவில்லை. பல கூட்டங்களில் குருவைக் பற்றி பேசாதீர்கள். அவரைக் முன்னிலை படுத்தாதீர்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகு ராமதாஸ் குடும்பம் மட்டும் தான் செழிப்பாக இருக்கும்.
கொங்கு மண்டலத்திலிருந்து ஒருவரை முதல்வராக்கிய சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் இந்த எடப்பாடி.

கொங்கு மண்டலம்
அன்புமணிக்கு தொண்டனைக் மதிக்க தெரியாது.
வியாபார ரீதியாக சிந்திக்கின்ற கட்சியில் இன்னும் செயல்பட முடியாது.
தமிழகம் முழுவதும் பல நிர்வாகிகள் இன்னும் பாமகவிலிருந்து விலகுவார்கள். பாமகவிற்க்கு பதில் திராவிட கட்சிகளே மேல். திண்டுக்கல் தொகுதியில் கொங்கு மண்டலத்தைக் சேர்ந்தவர்கள் தான் பாமக சார்பில் நிற்கிறார்.

தினகரன்
அங்கு என்னை பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். ஆனால் அங்கு என்னை பணியாற்ற வேண்டாம் என்று சொல்லி அன்புமணிக்கு வேலை செய்ய சொன்னார்கள். அவர் மகன் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் தினகரனே தவிர வேறும் யாரும் உண்மையைக் பேசுவது கிடையாது .அதற்காக அவருடன் நான் இணைவதாக நீங்கள் எண்ண வேண்டாம் என அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications