உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. "நாட்டாமை" அறிவிப்பு..!
கோவை: உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்காக சிறிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது, தேர்தலை கண்டு ச.ம.க.அஞ்சியத்ல்லை என்றும், எப்போது தேர்தல் நடந்தாலும் அதில் போட்டியிட தங்கள் கட்சியினர் ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ச.ம.க.போட்டியிடும் எனவும் கூறினார்.
தேர்தலில் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பது பற்றி மாவட்ட, ஒன்றிய, வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும், அதன் பிறகே எந்தெந்த இடத்தில் ச.ம.க.போட்டியிடும் என்பதை அறிவிக்க முடியும் எனக் கூறினார்.
விருதுநகரில் தாம் கட்டிய காமராஜர் மணி மண்டபம் விரைவில் சுற்றுலா தலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்த சரத்குமார், நாட்டில் பொருளாதார மந்த நிலை உள்ளதாக கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என்றும், ஒரு வேலை அப்படியே இருந்தாலும் நிலைமை படிப்படியாக சீராகும் என தெரிவித்திருக்கிறார் .
தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுபிய கேள்விக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழிசைக்கு ஆளுநர் பொறுபு கிடைத்திருப்பதை வரவேற்க வேண்டும் என பதில் அளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications