தவெக மேற்கு மண்டல கூட்டத்திலேயே செங்கோட்டையன் புறக்கணிப்பு - கடுகடுத்த அருண்ராஜ்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மேற்கு மண்டல மக்களின் கருத்து கேட்பு கூட்டம் கோவையில் இன்று நடத்தினார்கள். இதில் தவெகவின் மூத்த நிர்வாகியும், மேற்கு மண்டலத்தில் உள்ள அந்தக் கட்சியின் முகமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கடுப்புடன் பதில் அளித்தார்.
தவெக மேற்கு மண்டல மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த அருண்ராஜ், "இதற்கு முன்பாக மதுரை, கடலூரில் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மக்களுக்கு மற்றக் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. விவசாயம், மகளிர், விளிம்பு நிலை மக்கள், தொழில்துறையினர், தன்னார்வலர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் எங்களை நம்புகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

கடுப்பான பதில்
தவெகவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணன் செங்கோட்டையன் தவெக பிரச்சாரக் குழுவில் முக்கிய பிரமுகராக உள்ளார். இது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள குழு. நீங்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்வீர்கள் என தெரியும்" என்று பதில் அளித்தார்.
அப்போது குறுக்கிட்ட ஜேசிபி பிரபாகர், "தவெகவில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் பல்வேறு குழுக்களில் பயன்படுத்திக் கொள்ள தலைவர் நினைக்கிறார். அனைவருக்கும் சம அந்தஸ்து கொடுப்பதுதான் முடிவு. யாரையும் புறக்கணிக்கும் நோக்கில் செயல்படவில்லை. எல்லோரின் திறமைகளை பயன்படுத்தி, உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜக தான் அதிமுகவுக்கு தலைமை
மீண்டும் தொடர்ந்த அருண்ராஜ், "ஒரு தலைவருக்கு முன் உதாரணமாக எங்கள் தலைவர் உள்ளார். கூட்டணிக்கு தலைமை தானாக உருவாக வேண்டும். அதை யாரும் சொல்லி உருவாக கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது டெல்லி தலைமை தான். டெல்லி தலைமை தான் முடிவு செய்து உள்ளது. அவர்களின் அழுத்தத்தால் தான் மற்ற கட்சிகள் அந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன. அந்தக் கூட்டத்தில் எங்கள் தலைவர் மிகவும் எதார்த்தமாக பேசியுள்ளார்.
திமுகவை வீழ்த்துவோம்
கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம். சிறுபான்மையினரை கிள்ளு கீரையாக நினைப்பது திமுகவினர்தான். கடந்த தேர்தலில் சிறுபான்மையினருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்களா என்பது மக்களுக்கு தெரியும். சிறுபான்மையினரின் உண்மையான தலைவராக எங்கள் தலைவர் இருப்பார்.
தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் முழுக்க முழுக்க பாரபட்சமாக இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார்கள். 50,000 பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்றால் 30 நாட்களுக்கு முன்பாக அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும்.
வழிகாட்டு நெறிமுறைகள்
நிகழ்ச்சி நடைபெறும் திடல் மட்டுமல்லாமல் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு என்கிறார்கள். இது முழுக்க முழுக்க காவல்துறையும், அரசும் அவர்களது பொறுப்பை எங்கள் மீது திணிக்க பார்க்கிறார்கள். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்டது
இந்த விதியே தவெகவிற்காக தான் சேர்க்கப்பட்டிருக்கிறது. வேலூரில் எங்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான மனு கொடுத்த அடுத்த நாளே, முதல்வர் நிகழ்ச்சி வேலூரில் நடைபெறுகிறது என காரணம் காட்டி எங்கள் தலைவரின் நிகழ்ச்சிக்கு அனுமதியை மறுத்தனர்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications