அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா?
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களம் மாநில அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் அவர் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் யாரும் எதிர்பாராத இடம். இதனால் அதிமுக அதிர்ச்சியில் உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். தவெக மட்டும் தான் களத்தில் மந்தமாக உள்ளது. திமுக கூட்டணி அரசு பலத்துடன் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற டார்கெட்டுடன் திமுக பணியாற்றி வருகிறது.

வெளியூர் வேட்பாளர் விமர்சனம்
அவர்களுக்கு பெரியளவுக்கு கைக்கொடுக்காத கொங்கு மண்டலத்தில் இந்தமுறை திமுக அதிக கவனம் செலத்துகிறது. கோவையில் தங்களின் வெற்றியை உறுதிபடுத்துவதற்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை இறக்கியுள்ளனர். சொந்த ஊரான கரூரில் இருந்து, அதிமுக வலுவாக உள்ள கோவைக்கு வந்துள்ளது செந்தில் பாலாஜி எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க். செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி மட்டுமல்லாமல், கோவை முழுவதும் திமுகவுக்கு பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் செந்தில் பாலாஜி இருக்கிறார்.
இதுதவிர அவர் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். அதனால் அவர் பொறுப்புள்ள தொகுதிகளுக்கும் செந்தில் பாலாஜி பயணம் செய்கிறார். செந்தில் பாலாஜி வெளியூரைச் சேர்ந்தவர் என்கிற பிரச்சாரத்தை அதிமுக, பாஜக முன் வைக்கிறது. இதை உடைப்பதற்கு செந்தில் பாலாஜி பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறார். அதிமுக வேட்பாளரும் வெளியூரில் இருந்து வந்தவர் தான் என்று அவர் விமர்சனம் செய்கிறார்.
கோவை தெற்கில் செந்தில் பாலாஜி
ஏற்கனவே கோவை கொடிசியா வளாகம் அருகே செந்தில் பாலாஜிக்கு ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதிக்குள் குடியேற செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளார். கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செந்தில் பாலாஜி, "நான் கடந்த 5 வருடங்களாக கோவையில் உங்களுடன் பயணிக்கிறேன். புதியவன் இல்லை. இந்த ஊரைப் பற்றியும், பிரச்சனைகள் பற்றியும் நன்கறிவேன்.
என்னை எங்கு சந்திப்பது என்று பலரும் யோசிக்கலாம். ஏற்கனவே ஒரு வீடும் உள்ளது. ஆனால் கோவை தெற்கு தொகுதியில் குடியேற திட்டமிட்டுள்ளேன். வீடு பார்த்து கொண்டிருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். செந்தில் பாலாஜி ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீடு பார்த்துள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
-
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா? -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
“எனக்கும் சிற்றரசுவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு”.. அண்ணா நகரில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications