கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்தது தமிழக போலீஸ்
கோவை: கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.விடம் தமிழக போலீஸ் ஒப்படைத்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே அண்மையில் கார் ஒன்று திடீரென வெடித்தது. இந்த கார் வெடிப்புக்கு காரில் இருந்த சிலிண்டர்தான் காரணம் என தெரியவந்தது. அதேநேரத்தில் காரில் ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் சிதறி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர் முபின் என அடையாளம் காணப்பட்டது. முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதனால் பயங்கரவாத தாக்குதலுக்கான சதியில் முபின் ஈடுபட்டது அம்பலமானது.

என்.ஐ.ஏ.வுக்கு பரிந்துரை
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் முபினின் கூட்டாளிகள் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சட்டவிரோத பாதுகாப்பு சட்டம்- உபா அல்லது ஊபா பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து இவ்வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.வசம் ஒப்படைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

கோவையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள்
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையையடுத்து மத்திய உள்துறை அமைச்சகமும் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

என்.ஐ.ஏ. விவகாரத்தில் சர்ச்சை
இதனிடையே என்.ஐ.ஏ.வுக்கு கோவை சம்பவத்தை தமிழக அரசு தாமதமாக மாற்றிவிட்டது; இதனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். மேலும் தமிழக போலீசார் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனை தமிழக போலீசார் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

ஆவணங்கள் ஒப்படைப்பு
இந்நிலையில் தமிழக போலீசார் தங்கள் வசம் இருந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துவிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் ஏற்கனவே என்.ஐ.ஏ. காவல்நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இனி கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்கும்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications