திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீஸ்.. வீட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆணுறைகள்..!
திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீசார் ஆணுறைகளை கைப்பற்றினார்கள்.
Recommended Video

கோவை: திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் ஏராளமான ஆணுறைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
400 பெண்களை சீரழித்தவர்களில் கைதானவர்கள் 4 பேர்! அந்த 4 பேரில் திருநாவுக்கரசுதான் கேங் லீடர்! பண்ணை வீட்டுக்கு சென்ற ஏராளமான இளம் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் மற்றும் கார் வாங்கி விற்பனை செய்வதுதான் திருநாவுக்கரசின் வேலையே!

அழகான பெண்கள்
ஆனால் இதெல்லாம் பார்ட் டைம் ஜாப் போல இருக்கிறது. அழகான பெண்கள் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அவர்களிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி அதை சபரியிடம் தருவதுதான் திருநாவுக்கரசின் முக்கியமான வேலை.

வீடியோ எடுப்பார்கள்
சபரி அந்த நம்பரில் பேசி, மயக்கும் வார்த்தைகளை பேசி வலையில் வீழ்த்திவிடுவாராம். சபரி என்ற பெயர் இளம் பெண்களிடம் சொல்ல தயங்கி, தன் பெயரை ரிஷ்வந்த் என ஸ்டைலாக மாற்றி வைத்து கொண்டார். சிக்கிய இளம் பெண்களை சபரி திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்கு அழைத்து வருவார். அங்குதான் எல்லா பலாத்கார கன்றாவிகளும் நடந்துள்ளன. கற்பழிப்பு நடக்க.. நடக்க.. சபரியின் நண்பர்கள் இதை மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள்!

பண்ணை வீடு
ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில்தான் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பங்களாவில் நேற்று மாலை போலீசார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றதாகவும், ஆனால் பண்ணை வீடு பூட்டியிருந்ததாகவும் தெரிகிறது.

ஆணுறைகள்
அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஏராளமான பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக அந்த வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகளை இந்த கும்பல் வாங்கி வைத்திருந்ததை பார்த்ததும் போலீசார் ஷாக் ஆகிவிட்டார்களாம். அந்த பண்ணை வீட்டை சுற்றிலும் ஆணுறைகள் சிதறி கிடந்ததாம்! இந்த விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டார்களாம்.
பொள்ளாச்சி விஷயத்தில் போலீசார் துரிதமான செயல்களில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துள்ளனர். போலீசாரால் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கையில் ஒன்றுதான் இந்த பண்ணை வீட்டு சோதனை என்பதும்!

ஆவணங்கள்
அதேபோல, வழக்கு விசாரணை நடக்கும்போது அது சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது என்பதும் போலீசாரின் முக்கிய கடமை ஆகும். எனினும் கிடைக்கப்பட்ட அனைத்து விவரங்கள், தகவல்கள், ஆவணங்களை விரைவில் போலீசார் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications