குழந்தை கடத்தியதாக கைதான பெண்.. போலீஸ் கஸ்டடியில் உயிரிழப்பு.. காரணம் என்ன? வெளியான புது தகவல்
கோவை: திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக கோவையில் கைதான பெண், திடீரென உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சயனைடு போன்ற விஷத்தன்மை கொண்ட பவுடரை உட்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ். இவரின் மனைவி ரதி. இந்த தம்பதிக்கு ராஜேஸ்வரி, ராஜசேகர், ஸ்ரீஹரிஸ் (1½ வயது) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர் முத்துராஜின் மனைவி ரதி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு மாலை போடுவதாக வேண்டி உள்ளார். தசரா திருவிழா விரைவில் தொடங்க உள்ள நிலையில், கணவன்-மனைவி இருவரும் குழந்தை ஸ்ரீஹரிசுடன் கடந்த மாதம் 28-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதற்காக வந்தனர்.

இந்த நிலையில், குலசேகரப்பட்டினம் அருகே உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குழந்தை ஸ்ரீஹரிஸ் உடன் முத்துராஜ் ரதி தம்பதி கடந்த வியாழக்கிழமை சென்றுள்ளனர். அப்போது இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் , துணி துவைப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள சுகாதார வளாகத்துக்கு வந்திருக்கிறார்கள்.
சிசிடிவி காட்சி: அப்போது குளிக்க வந்த இடத்தில் பழக்கமான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கிக்கொடுப்பதாக தூக்கிச்சென்றார். அனால் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ரதியும் அவரது கணவரும் அப்பகுதி முழுவதும் தேடினர். அந்த பெண்ணையும், குழந்தையையும் மாயமானதையடுத்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து போலீசாரும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
பைக்கில் இருவர் குழந்தையை தூக்கி சென்ற காட்சிகள் சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், குழந்தையை கடத்திய தம்பதி கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஆலாந்துறை போலீசார் பூண்டி முட்டத்துவயல் குளத்தேரி அருகே பதுங்கியிருந்த தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் (வயது 45), அவருடைய மனைவி திலகவதி (40) என்பது தெரியவந்தது. இருவரும் குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
தம்பதி கைது: இதையடுத்து போலீசார் குழந்தையை கடத்திய திலகவதியையும், பாண்டியனையும் கோவை மாவட்டம் ஆத்தூர் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அப்போது திலகவதி, காவல் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, போளுவாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி உயிரிழந்தார்?: திலகவதி உயிரிழந்ததையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதாவது 4 மணி நேரம் நடந்த பிரேத சோதனைக்கு பிறகு, திலகவதி விஷத்தன்மை கொண்ட பவுடரை (சயனைடு) உட்கொண்டதில் உயிரிழந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எந்த மாதிரியான விஷத்தை உட்கொண்டார் என்பது அடுத்தக்கட்ட சோதனையில் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கோவை போலீசாரும் திலகவதி தற்கொலை தான் செய்தாரா? இல்லை ஏன் தற்கொலை முடிவை அவர் எடுக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திலகவதியின் கணவர் பாண்டியனிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் திருச்செந்தூரில் குழந்தையை கடத்தி எதற்காக சேலம் கொண்டுவந்தனர் என்றும் சேலத்தில் குழந்தையை வைத்து எதற்காக கோவை வந்தனர் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications