Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

109 ஜாதிக்கு துரோகம் செஞ்சுட்டு 'தெக்க வருகிறார்' எடப்பாடி பழனிசாமி-டிடிவி தினகரன் கடும் பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

கோவை: லோக்சபா தேர்தல் நெருங்குவதால்தான் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார் என சாடியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

கோவையில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: 2 ஆண்டுகளாக பசும்பொன் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி போகவில்லை. இதற்கு காரணம் 2021 தேர்தலின் போது, தவறான ஆட்சியால் இனி ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அப்போது வட தமிழகத்து மக்களை ஏமாற்றுவதற்காக வன்னியப் பெருங்குடி மக்களை ஏமாற்றுவதற்காக 10.5% உள் இடஒதுக்கீடு என அறிவித்திருந்தார். அது நீதிமன்றத்துக்கு போனால் நிற்காது என தெரிந்தும் செய்தார்.

 TTV Dhinakaran slams Edappadi Palaniswamis Pasumpon Visit

10.5% உள் இடஒதுக்கீடு: 4 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த போது ஒரு சமுதாயத்துக்கு உண்மையிலேயே செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் செய்திருக்கலாம். ஆனால் 4 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க போகிற நேரத்தில் 10.5% இடஒதுக்கீட்டை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. அது வன்னியர்களை ஏமாற்ற மேற்கொண்ட நடவடிக்கை.

 TTV Dhinakaran slams Edappadi Palaniswamis Pasumpon Visit

109 ஜாதி கோபம்: அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட 109 சமுதாய மக்களை உள் இடஒதுக்கீடு பாதிக்கும் என்ற அச்சத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறினார்கள். இன்றைக்கு வட தமிழகத்திலும் ஏமாற்றுகிற வேலையை செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென் தமிழகத்தில் வாழுகிற 109 சமுதாய மக்களை எடப்பாடி தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் அவர் செய்த தில்லு முல்லு மக்களை வெகுண்டெழ செய்தது. அதான் காரணம். அவர் செய்த மிகப் பெரிய பொலிட்டிக்கல் பிளண்டர். ஏற்கனவே துரோக சிந்தனை கொண்டவர். ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்ததுதான் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவுக்கு காரணம். இதற்கு பயந்து கொண்டுதான் 2 ஆண்டுகளாக பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை.

 TTV Dhinakaran slams Edappadi Palaniswamis Pasumpon Visit

துரியோதனன்: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டதால் இப்போது தென் மாவட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். வருகின்றன லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார். மகாபாரதத்தில் துரியோதனன் அகம்பாவத்தில் பேசிக் கொண்டு திரிவார். கடைசியாக வீழ்ச்சியை சந்தித்தார். அதுபோல, துரியோதனன் போன்ற துரோக சிந்தனை கொண்ட பழனிசாமி, வீழ்ச்சியடையப் போவது உறுதி.

 TTV Dhinakaran slams Edappadi Palaniswamis Pasumpon Visit

யாருடன் கூட்டணி?: லோக்சபா தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம் பெறும். ஒருவேளை நாங்கள் கூட்டணியில் இருக்க முடியாத சூழ்நிலை வந்தால் தனித்தும் போட்டியிடுவோம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இது தொடர்பாக உரிய நேரத்தில் நாங்கள் தெரிவிப்போம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+