கோவையில் கோரதாண்டவம்.. ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பெண்கள் பலி!
கோவை: கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பெண்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, தூத்துக்குடி, திருப்பூரில் ஏற்கனவே கொரோனா மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
இந்நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அண்மையில் 60 வயது மூதாட்டி ஒருவர் பக்கவாத பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியானது. இதனால் கொரோனா தடுப்பு சிகிச்சை அந்த மூதாட்டிக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கொரோனா பாதிப்பில் மூதாட்டி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கோவை பிஎன் புதூரை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், கொரோனா பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அந்த பெண்ணும் உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 5-ந் தேதி பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் கோவையில் மட்டும் கொரோனாவால் மொத்தம் 3 பேர் பலியாகி இருப்பது அங்கு அதிர்ச்சியை ஏர்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications