கோவையில் கோரதாண்டவம்.. ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பெண்கள் பலி!
கோவை: கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 2 பெண்கள் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் திருச்சி, தூத்துக்குடி, திருப்பூரில் ஏற்கனவே கொரோனா மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
இந்நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அண்மையில் 60 வயது மூதாட்டி ஒருவர் பக்கவாத பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியானது. இதனால் கொரோனா தடுப்பு சிகிச்சை அந்த மூதாட்டிக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கொரோனா பாதிப்பில் மூதாட்டி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கோவை பிஎன் புதூரை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், கொரோனா பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அந்த பெண்ணும் உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 5-ந் தேதி பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களில் கோவையில் மட்டும் கொரோனாவால் மொத்தம் 3 பேர் பலியாகி இருப்பது அங்கு அதிர்ச்சியை ஏர்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications