2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே
போக்குவரத்து போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் போராட்டம் நடத்தினர்
Recommended Video
கோவை: "சார்.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க.. அவசரத்துல போய்ட்டு இருக்கிறவங்களை எல்லாம் பிடிச்சு கேஸ் போட்டுட்டு இருக்கீங்களா?" என்று கேட்டு 2 பேர் நடுரோட்டில் உருண்டு புரண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை சாய்பாபாகோவில் பகுதி ரொம்பவும் டிராபிக்கான பகுதி. வாகனங்கள் ஏராளமாக சென்று கொண்டிருக்கும். இங்கு எந்நேரமும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவார்கள்.
அப்படித்தான் வழக்கமான டியூட்டியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் 2 பேருமே ஹெல்மெட் போடவில்லை.
மதுபோதை
ரத்தினபுரியை சேர்ந்த ஏசி மெக்கானிக் பழனி, பரோட்டா மாஸ்டர் மூர்த்தி ஆகியோர்தான் பைக்கில் வந்தவர்கள். அந்த பைக் வரும்போதே தாறுமாறாக வந்தது. இருவரும் தண்ணி அடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் வண்டியை நிறுத்தினர் டிராபிக் போலீசார்.
ஐயா சாமி..
ஆனால் தங்களது வண்டியை நிறுத்தியதற்கும், சோதனையிடுவதற்கும் 2 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு நடுரோட்டில் போய் தரையில் உருண்டனர். அதில் ஒருவர் எழுந்து வந்து போலீசார் அருகில் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார்.
கேட்டீங்களா
"வீடியோ எடுங்க.. என் கழுத்தை நெறிங்க.. ஐயா சாமி.. இவங்க டிராபிக்கை மதிக்கிறவங்க. அவசரத்துல போய்ட்டு இருக்கவங்களை எல்லாம் பிடிச்சு கேஸ் போட்டுட்டு இருக்கீங்க? எல்லாரையுமே செக் பண்ணனும். நான் சொன்னேனா இல்லையா.. செக் பண்ணிட்டு விட்டுடுங்கன்னு.. கேட்டீங்களா.. நாளைக்கு இது பேப்பர்ல வரணும்" என்று சொல்லிவிட்டு திரும்பவும் நடுரோட்டில் போய் படுத்து உருண்டார்.
வீடியோ
இப்படி படுத்து புரண்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போயின. சில வாகனங்கள் இவர்களை சுற்றி வந்து சென்று போயின. பிறகு ஒரு சிலர் அங்கிருந்த போலீசாரிடம், "எல்லாம் மப்புதான்.. இவங்கள போய் பிடிச்சு வெச்சிருக்கீங்க.. விடுங்க" என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அவ்வளவு டிராபிக் இருந்தும், நடுரோட்டில் ரெண்டு பேரும் படுத்து புரளும் இந்த வீடியோதான் வைரலாகிறது.