டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது ஏன்? மனைவி, மகளிடம் போலீசார் விசாரணை!
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த விஜயகுமாரின் மனைவி, மகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை சரக டி.ஐ.ஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென, பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவையில் தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றது. கோட்டாட்சியர், தடயவியல் துறையினர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது.

தற்கொலைக்கு காரணம்: உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில், டிஐஜி விஜயகுமாரின் உடல், சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின் உடலுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார்.
தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாருக்கு பணிச்சுமையோ, குடும்ப பிரச்சினையோ எதுவும் இல்லை. மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை. டிஐஜி விஜயகுமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். ஐஜி சுதாகர், கோவை எஸ்.பி போன்ற அதிகாரிகளுடன் விஜயகுமார் சிகிச்சைக்காக ஆலோசித்துள்ளார் என்று கூடுதல் டிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.
மனைவி - மகள்: தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். டிஐஜி விஜயகுமாரின் மனைவி கீதா வாணி மருத்துவராக உள்ளார். மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் டிஐஜி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவரிடமும் விசாரணை: இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஐஜி விஜயகுமாரின் மனைவி, மகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
டிஐஜி விஜயகுமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். ஐ.ஜி.சுதாகர் நேற்று முன் தினம் மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவருக்கு கவுன்சிலிங் அளித்துள்ளார். நீண்டகாலமாக மன உளைச்சல் இருந்த காரணத்தால் அவரது மனைவி வரவழைக்கப்பட்டுள்ளார். மனைவியுடன் இருந்த போதே இந்த தற்கொலை முடிவை டிஐஜி விஜய்குமார் எடுத்துள்ளார்.
அவரது தனிப்பட்ட பிரச்சினை என்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப பிரச்சினை என்பதால் அதனை போலீஸ் தலையிட முடியாது எனினும் தற்கொலை குறித்து ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications