இலங்கை குண்டுவெடிப்பு... தடுக்க தவறிய முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரணை தேவை... ஆணையம் அறிக்கை
கொழும்பு: இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தடுக்க தவறியது தொடர்பாக முன்னாள் அதிபர் சிறிசேனவிடம் விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இலங்கையிலுள்ள தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டினர் உட்பட 279 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்குப் பின், இதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இருப்பினும், விசாரணையில் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்பது இலங்கையிலுள்ள சஹ்ரான் ஹாஷிம் என்பவரே இந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு நடத்தியதும் தெரியவந்தது.

இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் அசம்பாவித சம்பவங்களை நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக 17 நாட்களுக்கு முன்னரே இந்திய உளவு துறை எச்சரித்ததாகவும் ஆனால், அதை இலங்கை அது குறித்து உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.

விசாரணை தேவை
சுமார் 440 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய இந்த ஆணையம் தனது அறிக்கையை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் முறையான எச்சரிக்கை வழங்கப்பட்ட பிறகும் கூட, உரிய நடவடிக்கை எடுக்காததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் அதிபர் சிறிசேன மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிசேன பதில்
முன்னதாக, இந்தத் தாக்குதல் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது குறித்து எவ்விதமான எச்சரிக்கைகளையும் தான் பெறவில்லை என்றும் முன்னாள் அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார். விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து இப்போது வரை அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வழக்கு விசாரணை
மேலும், உளவு துறை தலைவர் நிலந்தா ஜெயவர்தன, காவல் துறை ஐஜி புஜித் ஜெயசுந்தர ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தாக்குதலை தடுக்க தவறியது தொடர்பாக ஐஜி புஜித் ஜெயசுந்தர, பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியாக இருந்த ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications