இலங்கையில் தொடங்கியது குதிரை பேரம்.. எம்பிக்களை இழுக்க ராஜபக்சே மும்முரம்
கொழும்பு: இலங்கையில் பெரும்பான்மை நிரூபிப்பதற்காக, எம்பிக்களை இழுப்பதற்கு குதிரை பேரம் தொடங்கியுள்ளது.
இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, திடீரென நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் மைத்திரிபால சிறிசேன.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் தனக்கு தனிப்பெரும்பான்மை உள்ளதால் பிரதமராக நானே இருக்கிறேன் என்று அறிவித்தார் ரணில் விக்ரமசிங்க.

நாடாளுமன்றம் முடக்கம்
இந்த உண்மையை அறிந்து கொண்ட மைத்திரிபால சிறிசேனா உடனடியாக நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தார். நாடாளுமன்றம் நவம்பர் 16-ஆம் தேதி மீண்டும் கூட உள்ளது.

ராஜபக்சே ஆதரவுக்கு சதி
இந்த முடக்கம் மற்றும் இவ்வளவு நீண்ட கால இடைவெளி என்பது மஹிந்தா ராஜபக்சே தனது ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சதி தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்குதான் இப்போது அதிகப்படியான எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

குதிரை பேரம்
இது போக தமிழ் கட்சிகள் உள்ளிட்ட சிறு கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து ஆட்சியை தக்க வைக்கலாம் என்று நினைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் இந்த காலகட்டத்தில் குதிரை பேரம் மூலமாகவோ, மிரட்டியோ ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் மஹிந்தா ராஜபக்சே.

ராஜபக்சே நம்பிக்கை
இப்போதைக்கு தனக்கு 120 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக ராஜபக்சே கூறியுள்ளார். குதிரை பேரம் நடக்காமல் இப்படி கூறியிருக்க முடியாது என்கிறார்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்கள்.
{document1}
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications