Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு 13-வது திருத்தம்- ரணிலிடம் வலியுறுத்திய மத்திய இணை அமைச்சர் முரளிதரன்

இலங்கை ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் மத்திய அமைச்சர் முரளிதரன்.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அந்நாட்டின் 13-வது அரசியல் திருத்தம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடம் இந்திய இணை அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார்.

இலங்கையின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பிப்ரவரி 4-ந் தேதி கொண்டாடப்பட்டன. இலங்கையின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்க அமைச்சர் முரளிதரன் இலங்கை வருகை தந்தார். இந்திய பிரதமர் மோடியும் இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி தமது வாழ்த்து செய்தியில், இந்திய-இலங்கை இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவடையும் 2023ம் ஆண்டு குறிப்பதாக தெரிவித்த பிரதமர்,இருநாடுகளும் மிகவும் நெருக்கமான வரலாற்றுரீதியான உறவுகள்,புவியியல்ரீதியான நெருக்கம் மற்றும் கலாசாரங்களின் ஒத்திசைவு ஆகியவற்றைக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பொருளாதார மீட்சிக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கும் உறுதியான ஆதரவினையும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Indian Minister Muraleedharan meets Sri Lankan President Ranil Wickremesinghe

இந்த சுதந்திர தினத்தை இலங்கை தமிழர்கள் கரிநாளாக கருதி எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இலங்கை சுதந்திர தின எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தபட்டன.

Indian Minister Muraleedharan meets Sri Lankan President Ranil Wickremesinghe

இலங்கை சுதந்திர தினம் தொடர்பாக வாழ்த்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை வகுப்பதே இந்த ஆண்டு நமது முதன்மை நோக்கமாகும். அதற்கான புதிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்த திட்டத்தை நாட்டில் தற்போது முன்வைத்துள்ளோம். பெருமைமிகு தேசமாக இருந்த இலங்கையர்களின், கடந்த கால பலத்தை மீண்டும் மீட்டெடுத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து, போட்டி நிறைந்த உலகப் பொருளாதாரத்தின் புதிய இலக்குகளை நோக்கி நாம் துரிதமாக நகர வேண்டும். 2023 இல் 75 ஆவது சுதந்திர தின விழாவுடன் ஆரம்பமாகும் இப்புதிய மறுசீரமைப்புப் பயணத்தை, 2048 ஆம் ஆண்டு 100ஆவது சுதந்திர தின விழா வரை, மாறாத அரச கொள்கையை நிலைநிறுத்துவதே எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். நூற்றாண்டு சுதந்திர தினத்தின்போது நாட்டு மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்ட, உயர் பொருளாதார எழுச்சியைக் கொண்ட, உலகளாவிய மூலதனத்தின் மையமாக விளங்கும் புதிய இலங்கையை உருவாக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன் என கூறியிருந்தார்.

Indian Minister Muraleedharan meets Sri Lankan President Ranil Wickremesinghe

இதனிடையே இலங்கை சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொழும்புக்கு இந்திய இணை அமைச்சர் முரளிதரன் வருகை தந்திருந்தார். கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் முரளிதரன் சந்தித்து பேசினார். அப்போது இலங்கை தமிழருக்கு அரசியல் சாசனத்தின் 13-வது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என ரணிலிடம் அமைச்சர் முரளிதரன் வலியுறுத்தினார் என்கின்றன தகவல்கள்.

50 பேருந்துகள் வழங்கிய இந்தியா

Indian Minister Muraleedharan meets Sri Lankan President Ranil Wickremesinghe

இலங்கையின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இதற்கான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பக்லே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடம் வழங்கினார்.

Indian Minister Muraleedharan meets Sri Lankan President Ranil Wickremesinghe
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+