இலங்கை குண்டு வெடிப்புகள் பின்னணியில் இருப்பது எந்த அமைப்பு? வெளியானது வீடியோ ஆதாரம்
Recommended Video
கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இருப்பதை உறுதி செய்யும், வகையிலான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும், நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து கடந்த ஈஸ்டர் தினமான, ஞாயிற்றுக்கிழமை, அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 310 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தற்கொலைப்படையினர் 7 பேரும், இலங்கையிலுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். இது சன்னி பிரிவை சேர்ந்த அமைப்பு, என்று, அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளம்
இந்த நிலையில், தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களால் நடத்தப்படும், அல் குர்பா மீடியா என்ற சமூக வலைத்தள பக்கத்தில், இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு
இந்த வீடியோவில் இலங்கை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புதான் காரணம் என்பதை போன்ற தகவல்கள் உள்ளன. தாக்குதலில் ஈடுபட்டோர் தொடர்பான படங்கள், அவர்கள் கைகளில் துப்பாக்கிகள் இருப்பதை போன்ற படங்கள் அதில் உள்ளன.

இந்திய உளவுத்துறை கண்டுபிடிப்பு
இதனிடையே, இலங்கை குண்டு வெடிப்பில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தொடர்புள்ளதை முதலில் கண்டுபிடித்தது, இந்திய உளவுத்துறைதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங்க்கை சேர்ந்த ஏசியா டைம்ஸ் என்ற பிரபல பத்திரிக்கையிடம் பேசிய, இந்திய உளவுத்துறை சீனியர் அதிகாரி ஒருவர், "தேசிய தவ்ஹித் ஜமாத் என்பது களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தியவர்கள் மட்டுமே. அவர்களை கட்டுப்படுத்தும் மையம் வேறு" என்று கூறியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோ, இந்த கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

வெடிகுண்டுகள்
இதன் மூலம், இலங்கையில் முதல் முறையாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் எப்படி, மூளைச் சலவை செய்தார்கள், எப்படி இவ்வளவு வெடிகுண்டுகளை திரட்டினர் என்பது போன்ற விசாரணையில் தற்போது இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications