இலங்கை முழுவதும் திடீர் மின்வெட்டு.. குரங்கு தான் காரணமா? பொதுமக்கள் கடும் அவதி - பின்னணி
கொழும்பு: இலங்கையில் முழுவதும் இன்று திடீரென்று மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இலங்கை அரசு பொதுமக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுள்ளது. மேலும் இந்த திடீர் மின்தடையின் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் சக்தி எனும் கட்சியை சேர்ந்த அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். அந்த நாட்டின் மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெயக்கோடி என்பவர் உள்ளார்.

இலங்கை முழுவதும் பொதுமக்களின் வீடு மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவையான மின்சாரத்தை சிலோன் மின்வாரியம் (CEB or Ceylon Electricity Board) வழங்கி வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் பராமரிப்பு பணிக்காக அவ்வப்போது மின்சாரம் என்பது தடை செய்யப்படும்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று இலங்கை முழுவதும் ஒரே நேரத்தில் திடீரென்று மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மின்வாரிய பிராந்தியங்களிலும் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. இது வழக்கமான மின்தடை தான் என்று பலரும் நினைத்தன். மேலும் சில நிமிடங்களில் வந்துவிடும் என்று மக்கள் எண்ணினர்.
ஆனால் அப்போது தான் அதிர்ச்சியான தகவல் வெளியானது. அதாவது அந்த திடீர் மின்தடை சில பகுதிகளில் மட்டும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுபற்றி சிலோன் மின்வாரியம் சார்பில் ‛‛தேசிய மின்சாரம் வழங்கும் கிரிட்டில் திடீரென ஏற்பட்ட மின்சார ஏற்றத்தாழ்வு பிரச்சனையால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்யும் பணி என்பது சிலோன் மின்வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைய சில மணிநேரங்கள் ஆகும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் ஜெயக்கோடி கூறுகையில், ‛‛பாணந்துறை மின்நிலையத்தில் குரங்கு நுழைந்து பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த குரங்கால் தான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பாணந்துரை மின்நிலையத்தில் எமர்ஜென்சி பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
இதற்கிடையே திடீர் மின்தடையால் பொதுமக்கள் மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். செல்போன் சார்ஜ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். மின்சாரத்தை மீண்டும் விநியோகம் செய்யும் பணி என்பது தீவிரமாக நடந்து வருகிறது என்று அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
-
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்?












Click it and Unblock the Notifications