கொழும்பிற்குள் புகுந்த மர்ம லாரி.. முழுக்க முழுக்க வெடிகுண்டு? உளவுத்துறை தகவலால் தேடுதல் வேட்டை!
கொழும்பிற்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி புகுந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு: கொழும்பிற்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி புகுந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஈஸ்டர் திருநாளான நேற்று முதல்நாள் இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இதில் 450 பேர் காயம் அடைந்தனர். இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு.. களமிறங்கும் நாம் தமிழர்.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!
என்ன பிரச்சனை
கொழும்பிற்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி புகுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது மற்ற புரளிகள் போல இல்லாமல் உளவுத்துறைக்கு வந்த தகவல் என்று கூறப்படுகிறது. உளவுத்துறைக்கு வந்த நம்பகமான தகவல் இது என்று கூறுகிறார்கள்.
இரண்டு லாரி
இரண்டு லாரிகள் மற்றும் வேன்களில் நிறைய குண்டுகளை வைத்து மறைத்து கொழும்பு நகருக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த வாகனங்கள் எங்கே சென்றது என்று தெரியவில்லை. இதில் மிகவும் அபாயகரமான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் சென்றுள்ளது.
உளவுத்துறை எப்படி
இந்த தகவலை அடுத்து உளவுத்துறை தற்போது உஷாராகி உள்ளது. வதந்தி தகவல்களை போல இதை புறந்தள்ள வேண்டாம். தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்குங்கள் என்று போலீசுக்கு இதனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது இலங்கை முழுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் ராணுவம்
கொழும்பில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் அங்கு தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. முக்கியமாக வேன் லாரிகளில் தீவிர சோதனைகள் நடந்து வருகிறது. இந்த செய்தி அங்கு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.