தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் அதிரடி அறிவிப்புகள்! "அதிமேதகு", தனி தேசிய கொடி ரத்து!!
கொழும்பு: இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே இன்று அதிரடியாக 2 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியை அதிமேதகு என அழைக்கக் கூடாது; ஜனாதிபதிக்கு தனி கொடி என இருக்கக் கூடாது என அறிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.
Recommended Video
தற்காலிக ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் இலங்கை மக்களுக்கு ஆற்றிய உரை: தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிலையில் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். அரசியல் சாசனத்தின் 19-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த உகந்த சூழ்நிலைகள் உருவாக்கப்படும். நாட்டில் ஜனாதிபதியை அதிமேதகு என அழைப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அதேபோல் நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதுமானது. ஜனாதிபதிக்கு என தனியாக ஒரு கொடியை நடைமுறைப்படுத்த வேண்டியதும் இல்லை. ஜனாதிபதிக்கான தனி கொடி ரத்து செய்யப்படுகின்றது.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான எந்த குழுவுக்கும் அனுமதி கிடையாது. நாட்டு மக்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அதற்காக வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்கள், கிளர்ச்சிக்காரர்கள் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. போராட்டம் என்பது சட்டப்பூர்வமாக நடைபெறக் கூடியது. கிளர்ச்சி என்பது சட்டவிரோதமானது.
அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு, நாட்டு மக்கள் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டியது இப்போதைய தேவை. நமக்கு இதுதான் முதன்மையானது. அதன்பின்னரே அரசியல் பணிகளை செய்வது. நாடாளுமன்றத்தில் வரும் 20-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்வு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற எம்.பி.க்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றின் பாதுகாப்பை தற்காலிக ஜனாதிபதி என்ற அடிப்படையில் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

பாசிசவாத முறையில் சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளும் குண்டுகளும் ஏற்கனவே காணாமல் போயுள்ளது. போராட்டங்களால் பாதுகாப்பு படையினர் 24 பேர் ஏற்கனவே படுகாயமடைந்துள்ளனர். சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
எனக்கு ஜனநாயக அமைப்புகளில் நம்பிக்கை உண்டு. ஜனநாயகத்தின் அடிப்படையில்தான் செயல்படுவேன். நாட்டின் அரசியல்சாசனத்துக்கு விரோதமாக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன். நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடக் கூடாது. அது மக்களை வெகுவாகப் பாதிக்கும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஒட்டுமொத்த நாடும் புதிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான அடிப்படை சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். ஊழலற்ற அமைதியான, வளமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications