இலங்கை கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக பரவிய தகவல்.. போலீசார் மறுப்பு
கொழும்பு: இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என அந்நாட்டு போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் கூடியிருந்த மக்களை குறிவைத்து, 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த கொடூர தாக்குதலில் 290 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனால் இலங்கை முழுவதும் உச்சகட்ட பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுக்க இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையதள சேவைகளுக்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக தகவல் பரவியது. இதனால் இலங்கை மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டது. குறிப்பாக கொழும்பின் களனி, கிரிபத்கொட. ஜாஎல ஆகிய பகுதிகளில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இது உண்மைக்குப் புறம்பான போலியான தகவல் என இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மக்கள் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications