இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு.. ஊரடங்கு பிறப்பித்தும் பதற்றம்.. அவசரநிலை பிரகடனம் செய்தார் அதிபர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - அதிபர் சிறிசேனா அறிவிப்பு- வீடியோ
கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகளால் பதற்றம் நிலவி வரும் நிலையில் அதிபர் சிறிசேனா அவசரநிலையை பிரகடனம் செய்து உத்தரவிட்டார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான நேற்றைய தினம் 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 290 பேர் பலியாகிவிட்டனர்.

இதையடுத்து மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என அரசு அறிவித்துள்ளது.
தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிபர் சிறிசேனா அவசர நிலை பிரகடனம் செய்தார். மேலும் நாளை தேசிய துக்க தினம் அனுசரிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications