இலங்கையில் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து! கொழும்பில் சிறப்பு வழிபாடு!
Recommended Video
கொழும்பு: பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் 200க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பேராயர் மால்கம் ரஞ்சித் பங்கேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் இலக்கு வைத்து மனித வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டன. ஐ.எஸ். இயக்கம் நடத்திய இப்பயங்கரவாத தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இலங்கை முழுவதும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமையன்று மசூதிகளில் நடைபெறும் சிறப்பு தொழுகையை ரத்து செய்யவும் முதலில் பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொழுகைகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று இலங்கை முழுவதும் தேவாலயங்களில் ஞாயிறு பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டன. தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டத்தில் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் பங்கேற்றார். பேராயர் மால்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்கு உருக்கமாக உரையாற்றினர்.
அப்போது பலி கொள்ளப்பட்டோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications