அதெல்லாம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது.. மீண்டும் முருங்கை மரம் ஏறிய மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை தாம் ராஜினாமா செய்ய முடியாது; அப்படி செய்தால் இலங்கையின் நிலைத்தன்மை சீர்குலைந்து போகும் என்று மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி 2 மாதங்களாக போராட்டங்கள் தொடருகின்றன. கோத்தபாயவே வீட்டுக்குப் போ என்ற முழக்கம் இலங்கையின் புதிய புரட்சி முழக்கமாகிவிட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் சிங்களர், தமிழர், முஸ்லிம் என மூவின மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

இந்த போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் கோத்தபாய, மகிந்த மீது நம்பிக்கை இல்லாத தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளன. இந்த தீர்மானங்கள் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே கொழும்பில் இன்று ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்சேவும் பங்கேற்றார். இக்கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் எந்த ஒரு சிறப்பு அறிக்கையும் தாக்கல் செய்யப் போவதும் இல்லை; பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை. தாம் பதவியை ராஜினாமா செய்தால் நாடு நிலைத்தன்மையை இழந்துவிடும். ஆகையால் பதவி விலகப் போவது இல்லை. மேலும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். இத்தகவலை எம்.பி. தினேஷ் குணவர்த்தன் உறுதி செய்தார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சேவின் அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோர்களை அங்கு இருந்து அகற்றுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் போராட்டத்தினால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதனால் அவர்களை அகற்றுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடைபாதையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications