Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை:பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா? இடைக்கால அரசாங்கம் அமைவதில் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை ராஜினாமா செய்ய உள்ளனர். மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யும் நிலையில் புதிய இடைக்கால அரசாங்கம் யார் தலைமையில் அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இலங்கை கிளர்ச்சி

இலங்கை கிளர்ச்சி

இலங்கையில் பொருளாதாரம் படு மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த் 2 மாதங்களாக பொதுமக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தவுக்கு நெருக்கடி

மகிந்தவுக்கு நெருக்கடி

இலங்கை தலைநகர் கொழும்பில் காலிமுகத்திடலில் முகாமிட்டு இரவும் பகலுமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவை அகற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மேற்கொண்டு வருகிறார். முதலில் தாம் பதவி விலக முடியாது என மறுத்து வந்தார் மகிந்த ராஜபக்சே. ஆனால் மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் கோத்தபாய உறுதியாக இருக்கிறார்.

அவசர நிலை அமல்

அவசர நிலை அமல்

அத்துடன் திடீரென இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். இதனால் இலங்கை அரசியலில் அதி உச்ச குழப்ப நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

புதிய இடைக்கால அரசு?

புதிய இடைக்கால அரசு?

மகிந்த அண்ட் கோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைக்க உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு பத்திரிகையாளர்கள் கூறுகையில், மகிந்த ராஜபக்ச திங்கட்கிழமை பதவி விலகக் கூடும். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பார். தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் அரசு ஒன்றை அமைக்கத் தயாராக இல்லை. இந்த சூழலில் அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசு ஒன்றை அமைக்குமாறு அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அழைப்பார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+