இலங்கை:பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா? இடைக்கால அரசாங்கம் அமைவதில் குழப்பம்
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை ராஜினாமா செய்ய உள்ளனர். மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யும் நிலையில் புதிய இடைக்கால அரசாங்கம் யார் தலைமையில் அமையும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இலங்கை கிளர்ச்சி
இலங்கையில் பொருளாதாரம் படு மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த் 2 மாதங்களாக பொதுமக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தவுக்கு நெருக்கடி
இலங்கை தலைநகர் கொழும்பில் காலிமுகத்திடலில் முகாமிட்டு இரவும் பகலுமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவை அகற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே மேற்கொண்டு வருகிறார். முதலில் தாம் பதவி விலக முடியாது என மறுத்து வந்தார் மகிந்த ராஜபக்சே. ஆனால் மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதில் கோத்தபாய உறுதியாக இருக்கிறார்.

அவசர நிலை அமல்
அத்துடன் திடீரென இலங்கையில் கோத்தபாய ராஜபக்சே அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தினார். இதனால் இலங்கை அரசியலில் அதி உச்ச குழப்ப நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை அல்லது நாளை மறுநாள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

புதிய இடைக்கால அரசு?
மகிந்த அண்ட் கோவின் ராஜினாமாவைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைக்க உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு பத்திரிகையாளர்கள் கூறுகையில், மகிந்த ராஜபக்ச திங்கட்கிழமை பதவி விலகக் கூடும். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அரசு அமைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பார். தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் அரசு ஒன்றை அமைக்கத் தயாராக இல்லை. இந்த சூழலில் அனைத்து கட்சிகளைக் கொண்ட அரசு ஒன்றை அமைக்குமாறு அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே அழைப்பார் என்கின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications