இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நிறைவு- சுமார் 65%- 70% வாக்குகள் பதிவு- நாளை வாக்கு எண்ணிக்கை
கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இன்றைய தேர்தலில் மொத்தம் 65% முதல் 70% வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வாக்குகள் நாளை காலையில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இலங்கையின் 9-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 196 பேர் தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்படுவர். 29 பேர் நியமன எம்.பிக்கள்.
இலங்கையில் 22 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,62,63,885 பேர் வாக்காளர்கள். 7,452 பேர் வேட்பாளர்கள்.

சுமார் 70% வாக்கு பதிவு
நாடு முழுவதும் 12,985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது. மாலை 5 மணிவரை சுமார் 65% முதல் 70% வரையிலான வாக்குகள் பதிவாகின.

நாளை வாக்கு எண்ணிக்கை
வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்கு பெட்டிகள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாளை காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இதனை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கிறார்.

பலத்த போட்டி
மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளிடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

மகிந்த வெல்வார்?
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் மகிந்த ராஜபக்சேதான் மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. ஈழத் தமிழர் வாழும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கூடுதல் இடங்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாக்குப் பதிவு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications