உரம் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் மேலும் ரூ427.8 கோடி கடன் கேட்கும் இலங்கை!
கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கை, உரம் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து ரூ427.8 கோடி கடன் கேட்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கிப் போயுள்ளது. இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளிலும் நிலையற்றதாக மாறிவிட்டது. இலங்கை மக்களின் தொடர் போராட்டங்களால் பிரதமர் பதவியை இழந்தார் மகிந்த ராஜபக்சே.

தற்போது ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அனைத்து கட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. பொருளாதாரத்தை சரி செய்வதற்காக ரணில் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே இலங்கைக்கு இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுதவி கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசும் இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் இருந்து பெருமளவு கடன் பெறுவதில் இலங்கை தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து மேலும் ரூ427.8 கோடி கடன் கேட்கிறது இலங்கை. அந்நாட்டுக்கு தேவையான உரம் கொள்முதல் செய்ய இந்த கடனுதவியை இலங்கை கேட்டுள்ளது. இதற்கான தீர்மானத்துக்கு இலங்கை அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதனிடையே இலங்கைக்கான இந்திய தூதர் பாக்லேவுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் உதவிகளுக்கு ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications