தீவிரவாதி ஹாசீமுடன் தொடர்புடைய இஸ்லாமிய மதபோதகர் இலங்கையில் கைது
கொழும்பு: இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் தீவிரவாதி ஜாக்ரான் ஹாசீமுடன் தொடர்புடையவர் என கூறி முஸ்லீம் மதபோதகரை அந்நாட்டின் ராணுவத்தினர் கைது செய்திருக்கின்றனர்.
சவுதியைச் சேர்ந்த முஸ்லீம் மதபோதகர் முகமது அலியார் (வயது 60), இவர் இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஹாசீமின் சொந்த ஊரான கட்டன்குடியில் இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தி நடத்தி வருகிறார்.இந்த மையம் ஒரு மசூதி, பள்ளி மற்றும் நூலகம் ஆகிவற்றை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தீவிரவாதி ஜாக்ரான் ஹாசீமுடன் தொடர்பு இருப்பதாக முகமது அலியார் மீது புகார் எழுந்தது.
மதபோதகர் முகமது அலியார், சனிக்கிழமை நாடு திரும்பிய நிலையில், கொழும்புவில் உள்ள பண்டரநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
தீவிரவாதி ஜாக்ரானுக்கு முகமது அலியாரின் பணப்பரிவர்த்தனை செய்ததாக சந்தேகம் இருப்பதால் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications